கடும் மழையால் மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது !

மலையகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையால் மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

 

இந்த நிலையில் அவசர வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளதால் மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Spilling_Upper_Kotmale_Dam

இதேவேளை, நாட்டின் அநேகனமான பகுதிகளில் இன்று (26) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.