நாம் ஈமான் கொண்டோர் அமைப்பு கிழக்கு முஸ்லிம்களுக்கு விடுக்கும் அழைப்பு !

 
 
 
அசாத் சாலியின் விபச்சாரமும் எதிர்காலத் தலைவர்களுக்கு பாடம்புகட்டலும் 
இளைஞர்களே…! ஈமான் தாரிகளே…! அணிதிரள்வோம்
-கண்டன ஆர்ப்பாட்டம்-
 
அதி நவீன ஜாஹிலியத்தின் வெற்றிக்கு நாமும் பங்காளிகளாக மாறிவிட்டோமா? நமது ஈமான் யூதர்களிடம் அடகுவைக்கப்பட்டு விட்டதா? இந்த முஸ்லிம் சமுகத்தின் கேவலம் கெட்ட நகர்வுகள் இன்னும் உங்களை சிந்திக்கத் தூண்டவில்லையா?
ஈமான் கொண்ட சகோதரர்களிடம் ஒரு நிமிடம்
இலங்கைத் தேசத்தில் முஸ்லிம் சமுகம் இச்சமகாலத்தில் பல நெருக்குவாரங்களுக்குள்ளாகி வருவதை நாம் அறிவோம். எமக்கு எதிராக பௌத்த பேரீனவாதிகளும் யூத சியோனிஷ்ட்களும் சீயாக்களும் உள்ளார்ந்தமாகவும் வெளிப்படையாகவும் செயற்பட்டு வருகின்றனர். நாம் மதரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலமிழக்கச் செய்யபட்டு எமது கூட்டுக்கள் உடைக்கப்பட்டு நாம் தனிமையாக்கப்பட்டுள்ளோம். நாம் செய்யும் ஒவ்வொரு விடயங்களும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் அவைகள் பிரச்சினையாக மாற்றப்பட்டு வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களிடத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு விடயத்தை தற்போது பௌத்த பேரீனவாதிகள் கையில் எடுத்துள்ளார்கள். இவ்விடயம் அவர்களின் குற்றச் சுமத்தல்களுக்கு தீனி போடுவதாய் அமைந்துவிட்டது. குறிப்பாக பௌத்த பேரீனவாதிகள் எப்போதும் சொல்லும் குற்றச்சாட்டு தான் முஸ்லிம்கள் ‘பாலியல் வெறி’ பிடித்தவர்கள் என்ற கோசம். கடந்த சில நாள் வரை இது வெறும் வெற்றுக்கோசமாகத் தான் இருந்தது. ஆனால் இன்று பூதாகரமாக மாறிவிட்டது.
அதுதான் மத்திய மாகாண சபையின் உறுப்பினர் அசாத் சாலியின் பெண்களுடனான தொடர்பு.
மத்திய மாகாண சபை உறுப்பினரான உவைஸ் ஹாஜியார் தனது ஒரு சகோதரனாக, நண்பனாக அசாத் சாலியை கருதி பழகினார். இப்பழக்கம் காலப்போக்கில் அசாத் சாலியின் மனைவி-பிள்ளைகள் மற்றும் உவைஸ் ஹாஜியார் மனைவி – பிள்ளைகள் என குடும்ப உறவாக மாறியது. இது நமது குடும்பத்திலும் நடப்பதுதான். உவைஸ் ஹாஜியாரிடம் ஒரு சகோதரனாக பழகிய அசாத் சாலி பின்னர் தனது ‘நாய்க்குணத்தை’ வெளிப்படுத்திவிட்டார்.
‘நம்பிக்கை’ என்ற ஒரே சொல் தான் எம்மை கட்டிவைத்துள்ளது. அல்லாஹ்வும் கூட நம்பிக்கை கொண்டோரே என்றுதான் நம்மை விழிக்கின்றான். ஆக நம்பிக்கை என்ற ஒரு சொல்லை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அசாத் சாலி தனது சேட்டைகள் மூலம் ஒரு குடும்பப் பெண்ணை விபச்சாரத்திற்கே தள்ளிவிட்டார். இன்று உவைஸ் ஹாஜியார் குடும்பம் அசாத் சாலியின் பெண் பித்தலாட்டத்தினால் கூனிக் குரிகி நிற்கின்றது. இந்த நிலைமை உவைஸ் ஹாஜியாரின் குடும்பத்திற்கு மட்டும் தான் என்று நாம் நினைத்துவிடக்கூடாது.  இச்சம்பவம் நாளை எமக்கும் ஏற்படலாம். ஏனெனில் நம்பிக்கைக்குரியவர்களை காண்பது மிகுவும் அரிதாகவுள்ளது. எங்கும் முகமூடிகளுடன் போலி முகங்களாகவே தெரிகின்றன.
சகோதரர்களே…! நாம் எங்கோ கொழும்பில் ஒரு இடத்தில் நடந்த சம்பவம் தான் என்று அலட்சியமாக இருந்துவிடமுடியாது. ‘இன்றைய சிறு அலட்சியங்கள் தான் நாளைய பெரும் குற்றங்கள்’ எமது பிரதேசத்தில் இவ்வாறு எமது கண்ணுக்குத் தெரியாத ஆயிரம் ஆயிரம் அசாத் சாலிகள் உலாவுகிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. 
ஒரு சாதரண மனிதர் விடும் தவறு அந்த முழுச்சமுகத்தையும் பாதிக்காது. ஆனால் ஒரு அரசியல் பிரமுகராக முஸ்லிம்களுக்கு குரல் கொப்பவர் என்று காட்டிக்கொள்ளும் ஒருவர் விடும் தவறு அந்தச் சமுகத்தையே தலைகுனிய வைத்துவிடும். அதுதான் தற்போது நமக்கு நடந்துமுள்ளது. அசாத் சாலி என்னும் ஒரு முஸ்லிம் அரசியல் பிரதிநிதியால் நாம் எல்லோரும் பௌத்த பேரீனவாதிகளிடம் காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டோம். முஸ்லிம்கள் ‘பாலியல் வெறி’ பிடித்தவர்கள் என்ற வெற்றுக் கோசம் இன்று சிங்கள மக்களிடத்தில் வெடிக்க ஆரம்பித்துவிட்டது. சிங்கள ஊடகங்களும் அதனை லாபகரமாக பரப்பி வருகின்றது.
அசாத் சாலி ஏற்கனவே ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்தார். பின்னர் சிங்கள மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அழைத்து வந்து மணமுடித்து பிள்ளைகளுமுண்டு. தற்போது 04 பிள்ளைகளின் தாயை கூட்டிக்கொண்டு லண்டன் சென்று 03 மாதங்கள் தங்கிவிட்டு கொழும்பு வந்துள்ளார்.
ஏற்கனவே உள்ள இரண்டு மனைவிகளும் எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில் இவர் இப்பெண்ணை  திருமணம் முடிக்காமல் வீட்டில் வைத்து வாழ்ந்து வருகிறார். ஒரு மாற்றுமத சிங்களப் பெண்ணை திருமணம் செய்த ஒருவர் எப்படியான கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். ஒட்டுமொத்த சிங்களவர்களும் அசாத் சாலியின் நடத்தையை அவதானித்துக் கொண்டிருந்தனர்.
முஸ்லிம்கள் சிங்களப்பெண்ணை மதமாற்றுவதாக பொதுபலசேனா உட்பட பௌத்த சக்திகள் குற்றம் சுமத்தி வரும் இத்தருணத்தில் எதனையும் பொருட்படுத்தாது குறிந்த பெண்ணை கைவிட்டு மற்றுமொரு பெண்ணையும் வீட்டுக்கு கொண்டு வந்து வைத்திருப்பதானது தனது அரசியல் அதிகாரத்தினால் இஸ்லாத்தின் சட்டத்தையும் மாற்ற முடியும் என்ற நிலையைக்காட்டியுள்ளதுடன் முஸ்லிம் சமுகத்தின் மீதான பற்றின்மையை இவரின் இச் செயற்பாடு வெளிப்படுத்தியுள்ளது.
ஓட்டுமொத்த முஸ்லிம்களையும் இனவாத பௌத்த தேரர்களிடம் அடகுவைத்துவிட்டு இவர் லண்டனில் இருந்துவிட்டு வந்துள்ளார்.  எமக்கு எதிரான கருத்துநிலைகளை அணுக முடியாமல் பள்ளிவாசல்களை பாதுகாக்க முடியாமல் முஸ்லிம்கள் திண்டாடிக்கொண்டிருக்கும் இந்நிலையில் இவரின் நடத்தை எம்மை ஒட்டுமொத்தமாக தலைகுனிய வைத்துள்ளது. எல்லா முஸ்லிம்களும் பாலியல் வெறி பிடித்தவர்கள் என்ற  வெற்றுக்கோஷம் இன்று பௌத்தர்களிடத்தில் ஊன்ற அசாத் சாலியின் இவ் விபச்சார நடவடிக்கை வழிசமைத்துக் கொடுத்துள்ளது.
ஈமான் கொண்டோரே…! ரோசமுள்ள சகோதரர்களே…!
நாம் இவரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு வழங்காவிட்டால் மார்க்கத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கைக்கு அங்கிகாரம் வழங்கியவர்களாக மாறிவிடுவோம். நாமும் ‘பாலியல் வெறி’பிடித்தவர்கள் என்ற கோஷ்டிக்குள் உள்ளாகிவிடுவோம். நன்றாக புரிந்து கொள்ளுங்கள் எமது முஸ்லிம் சமுதாயம் இன்று படுகுழியில் விழுந்து கொண்டிருக்கின்றது அல்லது படுகுழியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதனை நாம் தான் மீட்க வேண்டும். 
இதற்காக நாம் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இவரின் பெண்பித்தலாட்டத்தை கண்டித்து நடவடிக்கை எடுக்குமாறு எமது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். தொப்பியும் ,தாடியும் ,ஹபாயும் இன்னும் அத்தர்வாடைகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டாலும் இதயசுத்திக்காக நன்மை கொடுப்பது அல்லாஹ்வே எமது ஒன்றிணைவு நிச்சயம் பௌத்த பேரீனவாதிகளிடத்தில் மாற்று சகோதர சகோதரிகளிடத்திலும் ஏற்பட்டுள்ள தப்பான அபிப்பிராயத்தை களையும் என்பதுடன் எதிர்கால அரசியல் தலைவர்களுக்கும் எமது ஊர்களில் உலாவும் ஆயிரம் ஆயிரம் அசாத் சாலிகளுக்கும் நிச்சயம் ஒரு சாட்டை அடியாகவும் இருக்கும்.
‘விபசாரியும், விபசாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர் களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில் அவ்விருவர் மீதும் உங்க ளுக்கு இரக்கம் ஏற்படவேண்டாம்; இன்னும், அவ்விருவரின் வேதனையையும் நம்பிக்கை யாளர்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். (அல்குர்ஆன்)
எம்மால் இஸ்லாமிய சட்டத்தை அமுல் படுத்த முடியாவிட்டாலும் நாம் ஒன்றிணைந்து எமது கண்டனத்தின்; மூலம் எமது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். விபச்சாரம், பிழையான உறவு முறை, ஆண்பெண் கலப்பு மற்றும் தொலை பேசி கள்ளக் காதல் என்பது தொடர்பில் தொடர்ந்தேச்சியான ஜும்ஆ பிரசங்கங்களை செய்ய எமது பிரதேச உலமாக்களிடம் குறித்த தினத்தில் வேண்டுகோள் விடுப்போம். அசாத் சாலியின் கொடும்பாவியை எரிப்போம்.
 
இடம் – எமது ஊர்களில் உள்ள ஜூம்ஆ பள்ளிவாசல்கள்
திகதி –                 2015 – 10 – 02 
                                      (வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து)
ஏற்பாட்டுக்குழு  –  நாம் ஈமான் கொண்டோர் அமைப்பு