விபத்தில் ஒருவர் மரணம்!

அசாஹிம் 

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டி என்பன மோதுண்டதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் இருவர் காயமடைந்த சம்பவம் நேற்று (25.09.2015) இரவு 11.00 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு பாசிக்குடா வாழைச்சேனை பிரதன வீதியில் குகநேசன் கலாச்சார மண்டபத்திற்கு முன்னபாக இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது பாசிக்குடா பகுதியில் இருந்து வாழைச்சேனை பகுதி நோக்கி வந்த துவிச்சக்கர வண்டி மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதிலயே இவ் விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்தவர் அதி வேகத்துடன் சைக்கிளை செலுத்தியதாலயே இவ் விபத்து நிகழ்ந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பேத்தாளை விஸ்னு கோவில் வீதியைச் சேர்ந்த மீன் பிடித் தொழிலாளியான வீ.பரசுராமன் (54) மரண மடைந்துள்ளதுடன் அவருடன் துவிச்சக்கர வண்டியில் பயணித்த அவரது மைத்துனரான கே.கமலநாதன் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த கல்குடாவைச் சேர்ந்த லெத்தீபன் (வயது – 24) காயமடைந்த நிலையில் கல்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5_Fotor_Collage_Fotor