ஜனாதிபதியின் மரண தண்டனை நிறைவேற்றம் தீர்மானத்திற்கு மட்டு.போதனா வைத்தியசாலை குழு பாராட்டுத் தீர்மானம்!

ஜவ்பர்கான்

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் முன்வைத்துள்ள பாலியில் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்திற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை குழு பாராட்டு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதுடன் ஜனாதிக்கு பாராட்டு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளதாக வைத்தியசாலை குழு உறுப்பினர் ரீ.எல்.ஜவ்பர்கான் தெரிவித்தார்.

 

வைத்தியசாலை குழு தலைவர் இராஜன் மயில்வாகனம் தலைமையில் நடைபெற்ற மாதாந்த கூட்டத்தின்போது இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அவர்மேலும் தெரிவித்தார்.
நாட்டில் நல்லாட்சி நிலவும் ஒரு காலகட்டத்தில் இவ்வாறு சிறுவர் சிறுமியர் மீதான பாலியல் வன்முறைகள் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்க வைகளாகும்.

 

நாட்டின் எதிர்கால தலைவர்கள் இவ்வாறு கசக்கப்படுவது மிகவும் துரதிஸ்டவசமான நிலையாகும். இதனை கருத்திற்கொண்டு ஜனாதிபதி அவர்கள் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்திருப்பதை எமது குழு முழமையாக பாராட்டுகிறது என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.