தேசிய பொருளாதாரத்தை சக்தியமப்படுத்தும் போது எமது உற்பத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கை – ஜனாதிபதி

 

தேசிய பொருளாதாரத்தை சக்தியமப்படுத்தும் போது எமது உற்பத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

maithiri

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தேசிய தொழிற்சாலைகளை சக்திமயப்படுத்துவது, தேசிய உணவு உற்பத்தியை பெருக்குவது, சர்வதேச பொருளாதாரத்தை வலுப்படுத்துதிலும் எமது உற்பத்திகள், எமது முயற்சி, எமக்கான அனைத்தையும் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் கொள்கையாக கொண்டுள்ளோம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.