மன்னார் மாவட்டத்தில் இரண்டு வீதிகளின் புனரமைப்பு பணியை ஆரம்பித்து வைத்தார் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் !

பாரூக் சிகான் 

 மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட ஆண்டான்குளம் கருங்காலித்தாழ்வு வீதி மற்றும் குமானயங்குளம் ஆலைய வீதி என்பனவே 11-09-2015 வெள்ளிக்கிழமை உத்தியோக பூர்வமாக சுமார் 2 மில்லியன் செலவில் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.

IMG_2225_Fotor

 வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துவைத்தார். நிகழ்விற்கு மதத்தலைவர்கள் மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளர் திரு.பி.ஜெனிங்ஸ் அவர்களும் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஊர் மக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_2227_Fotor IMG_2231_Fotor