மட்டு. ஐந்தாம்கட்டையில் கைக்குண்டு மீட்பு !

ஜவ்பர்கான்
 மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை –மட்டக்களப்பு பிரதான வீதியில் ஐந்தாம் கட்டடை பிரதேசத்தில் வளவொன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று இன்று காலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

163042-hand-grenade
 இன்று காலை 8.45 மணியளவில் தாளங்குடா இராணுவத்தினருக்கு பொதுமக்கள் கொடுத்த தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த இராணுவத்தினர் குண்டினை மீட்டு குண்டு செயலிழக்கச்செய்யும் படைப்பிரிவினரின் உதவியுடன் செயலிழக்கச் செய்தனர்.
காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.