பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு !

ஏ.எஸ்.எம்.தாணீஸ்
த ஆசியா மன்றம்,கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் (ரெக்டோ) ஆகியன இணைந்து சமூதாய பொலிஸ் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கந்தளாய் பிரதேசத்திற்குட்பட்ட கந்தளாய் தலைமை பொலிஸ்,தம்பலகாமம்,சேருநுவர,அக்போபுர,சூரியபுர ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கான செயலமர்வொன்றினை 14,15 திகதிகளில் கந்தளாய் அகில ரெஸ்ட்ரூரண்டில் நடாத்தியது.

IMG_2291_Fotor
கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் (ரெக்டோ) நிறுவனத்தின் தலைவர் ஜே.எம்.அஸார் தலைமையில் இச் செயலமர்வு நடைபெற்றது.
மக்களுக்கும், பொலிஸூக்குமிடையிலான தொடர்பினை வலுப்படுத்தி சிறந்த சேவையினை மக்களுக்கு பொலிஸினுடாக பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
த ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் தீபளால் கமகே உட்பட ரெக்டோ நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.தாணீஸ்,கள இணைப்பாளர் எம்.எஸ்.எம்.இர்பான்,தொழிநுட்ப உத்தியோகத்தர் எஸ்.நஹீம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.