மட்டு.வவுணதீவில் சட்டவிரோத மண் அகழ்வு – ஆறு பேர் கைது !

ஜவ்பர்கான்
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இடம் பெறும் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கடந்த ஒரு வாரத்தினுள் கைது செய்யப்பட்டிருப்பதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.நஸீர் தெரிவித்தார்.

S2650016_Fotor
நேற்றும் நேற்று முன்தினமும் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு குறித்த மண்ணை ஏற்றி வந்தபோது உழவு இயந்திரத்துடன் மூவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது அனுமதி பத்திரமின்றி மண் ஏற்றியவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் இடம் மாறி மண் அகழ்வில் ஈடுபட்வர்களுக்கு 5 ரூபாயுமாக நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் அபராதம் விதித்துள்ளார்.

S2650020_Fotor
இன்று காலை கைது செய்யப்பட்ட நபர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.
மண்ஏற்றிய உழவு இயந்திரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

S2650026_Fotor