ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் !

-எம்.வை.அமீர் –

 

உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம் எனும் தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை ஏற்பாடு செய்திருந்த  மாபெரும் இரத்ததான முகாம் 13-09-2015 அன்று சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையில் இடம்பெற்றது.

 

“ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார்” (அல்குர்ஆன் 5:32) எனும் அல்குர்ஆன் கூறும் நன்மைகளை பெற்றுக்கொள்வதற்காக இளைஞர்களும் யுவதிகளும் ஏனையோரும் தங்களது இரத்தங்களை தானம் செய்தனர்.

 

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களான டாக்டர் எfப்.எம்.ஹில்மி, டாக்டர் என்.றமேஸ் மற்றும் டாக்டர் எம்.ஏ.எfப்.சானாஸ் உள்ளிட்ட வைத்தியர்கள் தலைமையிலான கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின்இரத்த சேகரிப்பு குழுவினரால் இரத்தங்கள் சேகரிக்கப்பட்டன.

1_Fotor

 

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையின் ஜமாஅத்தினர் இரத்தங்களை வழங்கக்கூடியவர்களை திரட்டி அதிகளவான இரத்தங்களை தானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

DSC_0286_Fotor 2_Fotor