புதிய அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை !

new_cab_2015_sep

புதிய அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
புதிய பாராளுமன்றின் அமைச்சர்கள் முதல் தடவையாக எதிர்வரும் புதன்கிழமை கூட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை அந்தஸ்துடைய ஐந்து அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினரும் இவ்வாறு நாளைப் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.