வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள ‘காருன்ய’ !

அசாஹீம் 

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள ‘காருன்ய’ பாரிசவாத புணர்வாழ்வு மையத்தினால் பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை முகாம் நேற்று முந்தினம் இடம் பெற்றது.

156_Fotor

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் உளநல மருத்துவர் டாக்டர் ஜூடி ரமேஸ்குமார் தலைமையில் இடம் பெற்ற மருத்துவ முகாமில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வைத்தியர்கள் கலந்து கொண்டு சிகிச்சைகளை வழங்கினர்.

168_Fotor

வாழைச்சேனை, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி, வாகரை, கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 250 பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கலந்து கொண்டு சிகிச்சைகளையும் தங்களுக்கான ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டனர்.
இந் நிகழ்வினை எல்.ஓ.எச். நிறுவனம், நவ ஜீவன அமைப்பு, கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

174_Fotor 162_Fotor