நாம்பன் மாடுகளை திருடி விற்பனை செய்த இருவர் வெல்லாவெளி பொலிஸாரால் கைது!

crime-arrest
ஜவ்பர்கான்

 

மட்டக்களப்பு—வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னவத்தை பக்கியல்ல பிரதேசத்தில் 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரு நாம்பன் மாடுகளை திருடி 26ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த இருவரை வெல்லாவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

மேற்படி திருடப்பட்ட இருமாடுகளும் மருதமுனை பிரதேச இறைச்சி வியாபாரி ஒருவருக்கு 26 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுன் வாங்கிய மாடொன்றை அறுத்து குறித்த வியாபாரி விற்பனை செய்து விட்டதாகவும் மற்றைய மாட்டை உயிருடன் மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்ததனர்.

 

கைது செய்யப்பட்டவர்கள் நீதமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இது தொடர்பாக ஸ்தலத்திற்கு இன்று காலை சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றங்களை கண்டறியும் (சொகோ) விசேட பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை நடாத்தினர்.
வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.