மு.காவின் மத்திய குழுக் கூட்டத்தின் நிகழ்வு!

பைஷல் இஸ்மாயில் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டம் நேற்று முன்தினம் அட்டாளைச்சேனை ஹபானா பூங்காவில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், மத்திய குழுத் தலைவரும், அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும் மத்திய குழுவின் ஆலோசகருமான டாக்டர் கே.எல்.எம்.நக்பர், மு.காவின் உச்சபீட உறுப்பினரும் ஆலோசகருமான யூ.எம்.வாஹிட் ஆசிரியர், மத்திய குழுவின் பொருளாரும் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.எல்.அப்துல் பத்தாஹ் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட மத்திய குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், மத்திய குழுவின் ஆலோசகர்களான டாக்டர் கே.எல்.எம்.நக்பர், யூ.எம்.வாஹிட், பொருளாளர் ஏ.எல்.அப்துல் பத்தாஹ் உள்ளிட்ட பலர் அட்டாளைச்சேனை பிரதேசத்தின் எதிர்கால அரசியல் தொடர்பாகவும் அட்டாளசை்சேனை பிரதேசத்துக்கு கிடைக்கும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பாகவும் உரையாரடப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

DSC00825_Fotor DSC00831_Fotor DSC00841_Fotor DSC00828_Fotor