நேபாளத்தில் நிலநடுக்கம், சுமார் 700 பேர் பலி ! வீடியோ இணைப்பு

நேபாளத்தின் தலை நகரான காத்மண்டுவிலிருந்து 50 மைல் தூரத்திலுள்ள பகுதியில். 7.5 ரிச்டர் தொடக்கம் 7.7 ரிச்டர்  அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

ஆறு மைல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம். டெல்லி, சிக்கிம், லக்னோ, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டெல்லி புறநகர் பகுதியான நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 வினாடிகள் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற நிலநடுக்கத்தி;ல் 700ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.