முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே நேபாள மக்களுக்கு ட்வீட்டர் மூலம் தன்னுடைய அனுதாபத்தை பகிர்ந்துள்ளார் !

நேபாள பூமியதிர்வுச் செய்தி துக்ககரமானது. இந்த மோசமான அவலத்தை எதிர்கொள்ள அத்தேசமும் மக்களும் தைரியத்தைப் பெற நான் பிரார்த்திக்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் இன்று காலை இடம்பெற்ற நிலநடுக்கம் தொடர்பில், தமது டுவிட்டர் சமூகவலைத்தள இடுகையின் மூலமே மேற்கண்ட தகவலை மஹிந்த ராஜபக்ஷ  பகிர்ந்திருந்தார்.