மட்டு.மாவட்டத்தில் கடும் வரட்சி! குடிநீர் தட்டுப்பாடு! 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு!

ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வரட்சி ஏற்பட்டுள்ளது.இதனால் 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 

இம்மாவட்டத்தில் வரட்சி காரணமாக வவுணதீவுஇ கொக்கடிச்சோலைஇ வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப்பரிவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதுடன் இப்பிரதேசங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

 

வரட்சி காரணமாக ஏரிகளஇ; ஓடைகளஇ; குளங்கள் வற்றி வருகின்றன.பிரதான நீர்ப்பாசன குளங்களிலும் நீர்மட்டம் குறைவடைந்து வருவதாக நீர்பாசன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடும் வரட்சி மற்றும் வெப்பம் காரணமாக சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதுடன் பல விதமான நோய்களும் பரவி வருகின்றன.வயல் நிலங்கள் சலண்டு காணப்படுவதுடன் கால்நடைகளும் மேய்ச்சல் தரையின்றி அவதியுறுகின்றன.

இம்மாவட்டத்தில் இளநீர் உட்பட குளிர்மையான பானங்களுக்கும் கிராக்கி ஏற்பட்டுளளது.

S2550075_Fotor_Collage_Fotor