சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர்த்தவே தேசிய அரசுக்கான ஒப்பந்தம்!

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனை எதிர்­க்கட்சித் தலைவர் பத­வியில் அமரச் செய்வதற்கு ஐக்­கிய தேசி­யக் ­கட்­சி­யினால் தேசிய அர­சாங்­கத்­திற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் ­கை­ச்சாத்­தி­டப்­பட்­டுள்­ள­தாக முன்னாள் அமைச்­சரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விமல்­ வீர­வன்ச குற்றம் சுமத்­தியுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் எமது செயற்­பா­டுகள் மீது நம்­பிக்கை வைத்து எமக்கு வாக்­க­ளித்த 47 இலட்சம் மக்­களின் நம்­பிக்­கையை தகர்க்­கும் ­வ­கையில் நாம்­ ஒரு போதும் செயற்­படப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

சொத்து விபரம் தொடர்பில் வாக்­கு­மூலம் ஒன்றை பதி­வு­செய்­வ­தற்­காக முன்­னாள் அ­­மைச்சர் விமல் வீர­வன்ச நேற்று பொலிஸ் நிதிக்­குற்ற விசா­ரணைப் பிரி­விற்கு வர­வ­ழைக்­கப்­பட்­டி­ருந்­தார்­.

இதன்போது தனது வாக்கு மூலத்­தினை பதிவு செய்த பின்னர் அங்கு கூடி­யி­ருந்த ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­லளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர்­ மே­லும் ­க­ருத்து தெரிவிக்­கையில், கடந்த பொதுத் தேர்தலில் எம்­மீது நம்­பிக்கை வைத்து எமக்கு வாக்­க­ளித்த 47 இலட்சம் மக்­களின் நம்­பிக்­கையை வீண­டிக்கும் வகையில் நாம் ஒரு போதும்­ செ­யற்­பட போவது இல்லை. அந்­த­ வ­கையில் ஐக்­கிய தேசிய கட்சி யா னது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யு­டன் ­தே­சிய அர­சாங்கம் ஒன்றை ஸ்தாபிப்­ப­தற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்றை கைச்­சாத்­திட்­ட­மைக்­கான முக்­கிய காரணம் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­தனை எதிர்­க்கட்சித் தலைவர் பத­வியில் அம­ர­வைப்­ப­தற்கே ஆகும்.

இவ்­வா­றான நிலையில் சம்­பந்தன் எதிர்க்­கட்சித் தலைவராக பாராளுமன்றத்தில் செயற்படுவாராயின் எதிர்­வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவா மாநாட்டில் இலங்­கையின் யுத்­த ­கா­லப்­ப­கு­தியில் இடம்பெற்ற யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் அறிக்­கை­யொன்று வெளியி­டப்­ப­ட­வுள்ள நிலையில் இது குறித்து சம்­பந்­த­னினால் கூறப்­படும் கருத்­தா­னது அனை­வ­ரி­னாலும் நம்­பப்­ப­டு­வதற்­கான வாய்ப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன.

இதற்­கான சந்­தர்ப்­பத்தை ஐக்­கிய தேசி­யக்­கட்­சி சம்­பந்­த­னுக்கு ஏற்படுத்தி கொடுக்கும் வகையிலேயே தேசிய அரசாங்கம் ஒன் றுக்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது.

இந்நிலைமையானது மிகவும் பாரதூரமா னது. அந்த வகையில் நாம் எவ்வாறான சந் தர்ப்பத்திலும் தேசிய அரசுடன் இணையப் போவது இல்லை என்றார்.