புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையை 30 ஆக வரையறுப்பதற்கு தீர்மானம் !

 

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையை 30 ஆக வரையறுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கைக்கு மேல் அமைச்சரவை அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமாயின் பாராளுமன்ற அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர், அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

தேசிய அரசாங்கத்தின் தேவை கருதி அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிக்கும் தேவையேற்படின், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அடுத்துவரும் சில தினங்களில் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையை நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அகில விராஜ் காரியவசம் கூறினார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவைக்கான அங்கத்தவர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.