196 பாரா­ளு­மன்­ற உறுப்­பி­னர்­களின் பெயர் விப­ரங்கள் வர்த்­த­மா­னியில்…!

பொதுத் தேர்­தலில் வெற்­றி­யீட்­டிய 196 உறுப்­பி­னர்­களின் பெயர் விப­ரங்கள் வர்த்­த­மா­னியில் பிரசுரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்­பட்­டுள்­ள­தாக தேர்­தல்கள் செய­லகம் அறி­வித்­துள்­ளது.

பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­களின் பெயர்­களை அரச அச்­சக திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ள­தோடு அதனை பிர­சு­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் எடுத்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை, பொதுத் தேர்தல் பெறு­பே­றுகள் வெ ளியி­டப்­பட்­டுள்ள நிலையில் ஒரு வாரத்­திற்குள் தேசியப் பட்­டியல் உறுப்­பி­னர்­களை நிய­மிக்க வேண்டும் என தேர்­தல்கள் செய­லகம் அறி­வித்­துள்­ளது.

இதற்­க­மைய வெற்­றி­யீட்­டிய கட்­சி­களின் பொதுச் செய­லா­ளர்கள், தேசியப் பட்­டியல் உறுப்­பி­னர்­களின் பெயர் பட்­டி­யலை சமர்ப்­பிக்க வேண்டும் என கேட்­கப்­பட்­டுள்­ளது.

தேசியப் பட்­டியல் உறுப்­பி­னர்­களின் பெயர்கள் கிடைத்­ததும் அத­னையும் வர்த்­த­மா­னியில் அறி­விப்­ப­தற்கு தேர்­தல்கள் செய­லகம் நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வுள்­ளது.

பொதுத் தேர்­தலின் இறுதி முடி­வு­க­ளுக்கு அமைய ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு 93 ஆச­னங்­களும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணிக்கு 83 ஆச­னங்­களும் கிடைத்­தன.

இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி சார்பில் இம்­முறை 14 பேர் தேர்தல் மூலம் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளனர். மக்கள் விடு­தலை முன்­னணி நான்கு ஆச­னங்­களை கைப்­பற்­றி­யது.

ஈழ­மக்கள் ஜன­நா­யகக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஆகி­ய­வற்­றுக்கு தலா ஒரு ஆசனம் கிடைத்­தது.

அத்­துடன், ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு 13 தேசியப் பட்­டியல் ஆச­னங்­களும், ஐக்­கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 12 தேசியப் பட்­டியல் ஆச­னங்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி மற்றும் மக்கள் விடு­தலை முன்­னணி ஆகிய­வற்­றுக்கு தலா இரண்டு தேசியப் பட்­டியல் ஆச­னங்கள் கிடைத்­துள்­ளமை இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.
இதே­வே­ளை, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணி பொதுச் செய­லாளர் பதவி குறித்து ஏற்­பட்­டுள்ள சர்ச்சை நிலைமை தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்­களம் எவ்­வா­றான ஆலோ­சனை வழங்­கி­யது என்­ப­தனை பகி­ரங்­கப்­ப­டுத்த முடி­யாது என தேர்தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.

பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு சில தினங்­க­ளுக்கு முன்னர் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் முன்னணியின் பொதுச் செய­லா­ள­ராக கட­மை­யாற்றி வந்த சுசில் பிரே­ம் ­ஜ­யந்த பணி நீக்கம் செய்­யப்­பட்டு அப்­ப­த­விக்கு பேரா­சி­ரியர் விஸ்வ வர்­ண­பால ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார்.

அதனை தொடர்ந்து சுசில் பிரே­ம்­ஜ­யந்­தவும், விஸ்வ வர்ணபா­லவும் தேசியப் பட்­டியல் உறுப்­பி­னர்­களைப் பெய­ரிட்டு தேர்தல் ஆணை­யா­ள­ருக்கு அறி­விக்க முயற்­சித்­தனர். இதனால் பெரும் சர்ச்சை ஏற்­பட்­டது.

அவ்­வி­டயம் குறித்து தேர்தல்கள் ஆணை­யாளர் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் உத­வியை நாடி­யி­ருந்தார். இந்­நி­லையில், அது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளது.

இந்­நி­லையில், அரச ஊழி­யர்­க­ளுக்­கான ஒழுக்க கோவையின் பிர­காரம் தேர்தல்கள் ஆணை­யா­ள­ரான தமக்கு சட்ட மா அதி­ப­ரிடம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட விளக்­கத்தை பகி­ரங்­கப்­ப­டுத்த அதி­காரம் கிடை­யாது என அவர் தெரி­வித்­துள்ளார்.

எனினும், தேசியப் பட்­டியல் உறுப்­பினர் விப­ரங்கள் தொடர்பில் இது­வ­ரையில் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.