இரா.சம்பந்தனுக்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி?

Sampanthan 6_CI

புதி­தாக கூட­வுள்ள நாட்டின் எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தில் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி கிடைக்­க­லா­மென அர­சியல் வட்­டா­ரத்தில் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 

பிர­தமர் பத­வி­யேற்­க­வுள்ள ரணில் விக்­கிர­ம­சிங்க நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரையில் தேசிய அர­சாங்கம் ஒன்று அமை­ய­வுள்­ளமை தொடர்பில் குறிப்­பிட்­டி­ருந்தார். இதே­வேளை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் புதிய அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டு­வார்­க­ளெ­னவும் அதில் நிமல் சிறி­பால டி சில்­வா­விற்கு பிரதி பிர­தமர் பதவி வழங்­கப்­ப­டு­மெ­னவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லையில் ஐ.தே.க வும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து புதிய அர­சாங்­கத்தை அமைக்­கு­மாயின் அடுத்­த­தாக அதி­கூ­டிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைக் கொண்ட தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பிற்கே எதிர்க்­கட்சி தலைவர் பதவி வழங்­க­வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இதே­வேளை தேர்தல் வெற்றி குறித்து கருத்துத் தெரி­வித்­துள்ள கூட்­ட­மைப்பின் சார்பில் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்ள மாவை சேனா­தி­ராஜா தாங்கள் புதிய அர­சாங்­கத்தில் அமைச்சுப் பதவி ஏற்­கப்­போ­வ­தில்­லை­யெ­னவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்­நி­லையில் அமைக்­கப்­ப­ட­வுள்ள தேசிய அர­சாங்­கத்­திற்கு வெளியே இருக்கக் கூடிய கட்­சி­களில் அதி­கூ­டிய ஆச­னங்­களை தம்­வசம் கொண்­டுள்ள தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி வழங்­கப்­ப­ட­வேண்­டி­யேற்­படும். அந்­த­வ­கை­யி­லேயே இரா. சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

1977 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.