சுற்றுலா ஹோட்டல்காரர்களின் தீவைப்பினால் 12 பனை மரங்கள் நெருப்பில் கருகி நாசம்; தீஅணைப்பு படையினர் அணைத்தனர்!

ஜவ்பர்கான்

 

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி டச்பார் வீதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றினால் வைக்கப்பட்ட தீயினால் பாரிய தீச்சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தினால் 12 பாரிய பனை மரங்கள் நெருப்பினால் கருகி நாசமாகியுள்ளதுடன் சில வீடுககளுக்கும் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளன.இச்சம்பவம் நேற்று மாலை 8 மணியளவில் இஇ;மபெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

 

கல்லடியிலுள்ள சுற்றுலா விடுதி பணியாளர்கள் குறித்த மரங்களில் குழவிக்கூடுகள் இருப்பதாக கூறியே மரங்களுக்கு தீவைத்ததாக அயல்வீடுகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
வீடுகளுக்கு இடையில் வளர்க்கபட்டிருந்த பாரிய பனை மரத்தோட்டத்திலேயே இத்தீவைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு படையினர் அயல் வீடுகளுக்கு தீபரவாமல் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தனர்.சில வீடுகளுக்கு சிறிய தேசங்கள் ஏற்பட்டுள்ளன.

காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Copy of DSC01346_Fotor S2540017_Fotor