கிழக்கில் 5 மாகாண சபை உறுப்பினர்கள் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி; பலர் தோல்வி!

ஜவ்பர்கான்
நடந்து முடிந்த 8வது பாரளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் போட்டியிட்ட ஐந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட அலிசாகிர் மௌலானா அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர்இ தயா கமகே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்ட விமலவீர திசாநாயக்க திருகோணமலையில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட இம்ரான் மஹ்ரூப் ஆகியோரே வெற்றி பெற்றவர்களாவர்.

 

இதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆர்.துரைரட்ணம் கே.கருணாகரன் சிப்லி பாறூக் எம்.எஸ்.சுபைர் சிவநேனத்துரை சந்திரகாந்தன் நஜீப் அப்துல் மஜீத் உட்பட பல கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தோல்வியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.