தபால் மூலம் வாக்களிக்க முடியாமல் போனவர்களுக்கு நாளை மீண்டுமொரு சந்தர்ப்பம் !

imagesதபால் மூல வாக்களிப்பு இடம்பெற்ற மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் திகதிகளில் வாக்களிக்க முடியாது போன வாக்காளர்கள் நாளை தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

வாக்காளர்கள் தமது மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி அலுவலகத்திற்கு சென்று நாளைய தினம் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணைாயளர் எம் எம்.மொஹமட் குறிப்பிடுகின்றார்.