- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

    வை.எல்.எஸ் ஹமீதின் பதில் கட்டுரை – 01 மீதான விமர்சனம்

    குற்றச் சாட்டு – 01 எல்லா அமைச்சர்களுக்கும் உத்தியோகபூர்வ ஒரு ஊடக குழு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. அதற்கு மேலதிகமாக பெருந்தொகையான இலட்சக் கணக்கில் சம்பளம் கொடுத்து வைத்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன? பதில் ஒரு அமைச்சருக்கு அரசாங்கத்தால்...

தற்போதைய அரசாங்கம் விகாரைகளில் உள்ள உண்டியல்களை கொள்ளையிடாது :சஜித் பிரேமதாச

நாட்டின் தற்போதைய அரசாங்கம் விகாரைகளில் உள்ள உண்டியல்களை கொள்ளையிடாது எனவும் கடந்த அரசாங்கம் கொள்ளையிட்டு நிரப்பிக்கொண்ட உண்டியல்களை மக்கள் மயப்படுத்த போவதாகவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சீகிரிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 31ஆவது முன்னுதாரண...

அடுத்த சர்வதேச கூட்டுறவு தினவிழா வடக்கில் : அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

சுஐப் எம். காசிம் சர்வதேச கூட்டுறவு தினத்தை வடமாகாணத்தில் அடுத்த வருடம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் முதலாம் திகதி குருணாகலையில் இடம்பெறவுள்ள 95வது சர்வதேச கூட்டுறவுத் தின நிகழ்வில் ஜனாதிபதியிடம் இந்த புதிய...

முதலில் இனவாதத்தை கக்கும் அமைச்சர்களை கட்டுப்படுத்துங்கள் : நாமல் ராஜபக்‌ஷ

இனவாதத்தை கக்கும் அமைச்சர்களைஅரசாங்கத்தில் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு சட்டம் போடுவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார். நாம் இந்த நாட்டில் இனவாதத்தை தூண்டுவதாக கூறியவர்கள் இப்போது அவர்களின் நிர்வாணம் வெளிப்பட்டுள்ளதால் செய்வதுஅறியாது முழித்துக்கொண்டு உள்ளனர்.   நாட்டில் எல்லா துறைகளிலும் பிரச்சினைகள் தலை துக்கியுள்ளன. தேர்தலுக்கு முகம் கொடுக்க முடியாமல் அரசாங்கம் அதனைவருடக்கணக்கில் பிற்போட்டு வருகிறது. இனவாதத்தை கக்கும் அமைச்சர்களை அரசாங்கத்தில் வைத்திக்கொண்டு பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் சட்டம்போடுவதால்ஒன்றும் நடக்கப் போவதில்லை. நாட்டில் வரலாற்றில் இல்லாத அளவு டெங்குநோய் அதிகரித்துள்ளது.வைத்திய சாலைகளில் மக்கள் கட்டில்கள் இல்லாமல் நிலத்தில்படுத்து உறங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மத்திய வங்கியை நிர்ணயிக்க முடியாது சுகாதாரஅமைச்சை நிருவாக செய்ய தெரியாத விருதுபெற்ற நிதி அமைச்சரும் சுகாதாரஅமைச்சரும் இந்த நாட்டில் மட்டுமே  இருக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். இன்று அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

Latest news

- Advertisement -spot_img