தற்போதைய அரசாங்கம் விகாரைகளில் உள்ள உண்டியல்களை கொள்ளையிடாது :சஜித் பிரேமதாச

நாட்டின் தற்போதைய அரசாங்கம் விகாரைகளில் உள்ள உண்டியல்களை கொள்ளையிடாது எனவும் கடந்த அரசாங்கம் கொள்ளையிட்டு நிரப்பிக்கொண்ட உண்டியல்களை மக்கள் மயப்படுத்த போவதாகவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சீகிரிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 31ஆவது முன்னுதாரண கிராமத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆங்காங்கே சென்று விகாரைகளில் உள்ள உண்டியல்களை அரசாங்கம் எடுத்துக்கொள்ள போவதாக கூறிவரும் கதை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் ஒப்பந்தங்கள் மூலம் பெற்றுக்கொண்ட சகல பணத்தையும் அரசாங்கம் அரசுடமையாக்க தீர்மானித்துள்ளது எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.