ரக்பி வீரர் வஸிம் தாஜூ டீனின் மரணம் தொடர்பில் மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவு !

B-yuDyCUIAAoUTT

 

ரக்பி வீரர் வஸிம் தாஜூ டீனின் மரணம் தொடர்பில் மீண்டும் பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்றது.

இதன்போது குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த உத்தரவை நீதவான் பிறப்பித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி நாரஹேன்பிட்டியவில் உள்ள ஷாலிக்கா விளையாட்டரங்கிற்கு அருகில் கார் ஒன்றினுள் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ரக்பி வீரர் வஸிம் தாஜூ டீனின் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.