ரணில் உருவாக்கிய புஞ்சி பிரேமதாச…!

2120_Fotorஅஸ்ரப் ஏ சமத்

கொழும்பு மத்தியதொகுதியில் ரணில் உருவாக்கிய புஞ்சி பிரேமதாசா போன்று முஜிப் ரஹ்மானை நாம் முஸ்லீம்களின் பிரநிதியாக நாம் தர்ந்தொடுத்து அவரை இம்முறை பாராளுமன்ற உறுப்பிணராக அனுப்ப வேண்டும் என. இம்முறை தேசிய பட்டியல் ்எம்பியும்  முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் தெரிவித்தார்.
நேற்று  இரவு(27) திகதி –  வெள்ளவத்தை மெரைன் ரைவ் கோட்டலில்  கொழும்பு இளைஞா் கூட்டமைப்பு என்ற அமைப்பு  முஜிபு ரஹ்மானுக்கான ஆதரவும், கொழும்பு வாழ் முஸ்லீம்களது கல்வி, வீடமைப்பு, தொழில் வாழ்வாதார பற்றிய கலந்துரையாடல் சட்டத்தரனி யு.எம். மர்சூக்  தலைமையில் நடைபெற்றது. இதில் கொழும்பு வாழ் புத்திஜீவிகள் வர்த்தகர்கள், இளைஜர்களும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கல்வியமைச்சரும் சீனா நாட்டுக்கு புதிய துாதுவருமாக நியமிக்கப்பட்ட கலாநிதி கருனாசேன கொடித்துவக்கு, கலந்து கொண்டார்.
முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்கார், முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் ஆகீயோர்களும் இங்கு உரையாற்றினார்கள்.
இஙகு உரையாற்றிய காலநிதி கருனாசேன கொடித்துவக்கு“
முஜிப் ஒரு துடிப்பானர் அவர் எப்பகுதியிலும் என்ன தீங்குகள் அநீதிகள் கட்சிக்கு எதிராக ஏதேனும் நடைபெற்றால் கொழும்பு மத்தியில் உள்ள ஆதரவாளர்களைக் கொண்டு ஆர்ப்பாட்டமும்  மற்றும் உலகுக்கும்  குரல் கொடுக்கக் கூடியவர். 
கடந்த  6 வருடங்களாக கொழும்பு மத்திய தொகுதிக்கு  ஒரு முஸ்லீம் பாராளுமன்றத்தை  நாம் இழந்ததிருந்ததோம் இங்கு கலீல், ஹலீம் இசாக்,  ஜாபீரே காதர், ஆர் .பிரேமதாச போன்ற பலர் பாராளுமன்றத்ததை பிரநிதித்துவப்படுத்தினார்கள்.
 அதனை நீங்கள் இம்முறை முஜீபை கொண்டு  நிவர்த்தி செய்ய வேண்டும். முஸ்லீம்களின் கல்வி நிலை மை மிகவும் பின்தங்கிய மாவட்டமாக கொழும்பு இருந்து வருகின்றது.  நான்  கல்விய மைச்சராக இருக்கும்போது  கொலநாவையில் முஸ்லீம்களுக்கென பாடசாலையை நிறுவ முற்பட்டபோது  அப்போதைய ஜக்கிய மக்கள் சுதந்தி முன்னணியின் மேல் மாகண  முதலமைச்சர் ரெஜிநோல் குரே அதனை தடுத்து நிறுத்தினார்.
அவரின அனுமதி இல்லாமால் நான் எந்த  மாகண பாடசாலைக்கும்  போகமுடியாது வாறு சுற்றறிக்கை கல்விய அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்தார். என முன்னால் கல்வியமைச்சாரும் சீனாவுக்கான துாதுவருமான நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி கருனனா சேன கொடித் துவக்கு தெரிவித்தாாா்.
முஜீபு ரஹ்மான் –  உரையாற்றுகையில் 
கொழும்பில் க.பொ. த சாதார இம்முறை சித்தியடைந்தவாக்ள 5 விதமே. மேல் மாகாணத்தில் 39 கல்வி வலயங்களுள் கொழும்பு மத்திய கல்விய வலயம் 36 வது பின்தங்கிய நிலையில் கடந்த ஆண்டுடின் க.பொ. சாதரண தரததின் சித்தியில் உள்ளது. 
வருடா வருடம்   1000 மேறபட்ட மாணவர்களுக்கு வருடா வருடம் பாடசாலை முதலாம் தர  அனுமதி கிடைப்பதில்லை.  சர்வதேச பாடசாலை நோக்கிச் செல்கின்றனர்.   தெமட்டக் கொடையில் வீதியில் மட்டும்  20 சர்வதேச பாடசாலைகள் உள்ளது. இதனை வியாபாரமாக்க கொண்டு நடத்துகின்றனர். 
 
கொலநாவையில் 15 சர்வதேச பாடசாலைகள் இருக்கின்றது. மாதாந்தம் 15ஆயிரம் அறவிடுகின்றனர். பின்னர் பனம் கட்ட தாய்மார்  முடியாமல்  அரச பாடசாலை களில் அனுமதி கேட்டு அரசியல் வாதிகளிடம் செல்கின்றனர்.  பெற்றோர்கள் தமிழ்மொழி முலம்      பேசுவது பழகுவது ஆனால் சிங்கள  மொழி முலம் தமது பிள்ளைகளை சோக்கின்றனர். இதனால் பிள்ளைக்கு ஒரு  மொழியும் தெரியாது.  இதனால் 5.6.10ஆம் ஆண்டுடன் பாடசாலைக் கல்வியை இடை நடுவில் நிறுத்தி விடுகின்றனர்.
இப்பவும் நீங்கள் மருதானைக்கு சென்றால் அங்கு ஒரு இடத்தில் சாரய (மது) வார் ஒன்று  இருக்கின்றது. அந்தக் கட்டிடத்திற்கு மேல் முஸ்லீம் பிள்ளைகள் செல்லக் கூடிய சர்வதேச பாடசாலை ஒன்றும் இயங்குகின்றது. இது தான் கொழும்பு வாழ் மக்களின் நிலை. கடந்த ஜனாதிபதிகள்  சந்திரிக்கா தொட்டு மஹிந்த வரை இந்த மக்களுக்கு எவ்வித அபிவிருத்தியையும் செய்யவில்லை. மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் யுகத்திற்கு ப் பிறகு இந்த மக்களை கோட்டாபாய கொழும்பை அழகுபடுத்தல் என்ற காரண்த்தைக் காட்டி  மக்களது பொருளாதாரம்  வாழ்வாதாரம் வீடமைப்புக்களை அப்புறப்படுத்தினர்.
அங்கு குழுமியிருந்த சிலர் முஜிபு தமது பண தோர்தல் பணிக்கு அர்ப்பணிப்பதாகவும் உறுதியளித்தனர்.
205_Fotor 2021_Fotor