இருபதுக்கு 20 தொடராக உருவாக உள்ளது ஆசிய கிண்ணப் போட்டிகள் !

Unknown

 அடுத்த ஆண்டு நடை­பெ­ற­வுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 போட்டித் தொட­ராக நடத்­து­வ­தற்கு ஆசிய கிரிக்கெட் சபை ஆராய்ந்து வரு­கி­றது. 

இந்­தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்­க­ளாதேஷ் என, ஆசிய நாடுகள் இணைந்து ஆசிய கிரிக்கெட் சபையை (ஏ.சி.சி.) 1983 இல் உரு­வாக்­கப்பட்டது. 

இதன் சார்பில் 1984 முதல் 2 ஆண்­டுக்கு ஒரு முறை, ஆசிய நாடுகள் மாத்­திரம் பங்­கேற்கும் ஆசிய கிண்ணத் தொடர் ஒருநாள் போட்டித் தொட­ராக நடத்­தப்­ப­டு­கின்­றன.

இது­வரை நடை­பெற்ற 12 தொடர்­களில் இலங்கை, இந்­திய அணிகள் அதி­க­பட்­ச­மாக தலா 5 முறை சம்­பியன் கிண்­ணத்தை வென்­றுள்­ளன. 

அடுத்த ஆண்டு நடை­பெ­ற­வுள்ள ஆசிய கிண்ணத் தொடரை சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 தொட­ராக மாற்­றி­ய­மைக்க முடிவு செய்­துள்­ளனர். இது­கு­றித்து ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் செய்­யது அஷ்­ரபுல் ஹக் கூறி­யுள்­ள­தா­வது:

“அடுத்த ஆண்டு மார்ச் 11ஆம் திகதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை ‘சர்­வ­தேச இரு­ப­துக்கு 20’ உலகக் கிண்ணத் தொடர் இந்­தியாவில் நடை­பெ­ற­வுள்­ளது. 

இதற்கு முன்­னோ­டி­யாக இருக்கும் வகை யில், 2016ஆம் ஆண்டின் ஆரம்­பத்தில்

நடை­பெ­ற­வுள்ள ஆசிய கிண்ண தொடரை, இரு­ப­துக்கு 20 தொட­ராக நடத்­த­வுள்ளோம். 

இதன் பின்னர், 2019 இல் இங்­கி­லாந்தில் நடக்கும் 50 ஓவர் உலகக் கிண்ண போட்டி நடை­பெ­றும்­போது, அதனை கருத்தில் கொண்டு, 2018 ஆசிய கிண்ணத் தொடரை, மீண்டும் சர்­வ­தேச ஒருநாள் தொட­ராக நடத்­த­வுள்ளோம். 2020இல் மீண்டும் ஆசிய கிண்ணத் தொடர் இரு­ப­துக்கு 20 தொட­ராக நடை­பெறும். 

ஏனெனில், ஆப்­கா­னிஸ்தான், நேபாளம், ஹொங்கொங், ஐக்­கிய அரபு இராச்சிய, அணி கள் சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரை விளை­யாடும் அந்­தஸ்தை பெற்­று ள்­ளன. இந்த அணிகளுக்கு உதவும் வகை யில் இவ்வாறு மாற்றி அமைக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.