விமல் வீர­வன்­சவின் தேசிய சுதந்­திர முன்­னணி ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டது!

35876_406000982798_174015567798_4678438_3989796_n

 ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்­சவின் தேசிய சுதந்­திர முன்­னணி வெளி­யேற்­றப்­பட்­டது .

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­யாக விமல் வீர­வன்ச தலை­மை­யி­லான தேசிய சுதந்­திர முன்­னணி செயற்­பட்டு வந்­தது.

எனினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு விமல் வீர­வன்­சவின் தேசிய சுதந்­திர முன்­ன­ணியை பங்­காளிக் கட்­சி­யாக ஏற்­றுக்­கொள்ள விரும்­ப­வில்லை எனவும் செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன.

 ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் ஆலோ­ச­கரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பின்போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.