“மைத்திரி – ரணில் உறவில் ஜனநாயகம் வலுவடைகிறது” -ஜனா­தி­பதி

imageஜன­வரி 8 ஆம் திகதி ஜன­நா­யக புரட்­சி­யி­னூ­டாக உத­ய­மான மைத்­திரி- –ரணில் உற­வி­னூ­டாக நல்­லாட்­சியும் ஜன­நா­ய­கமும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதன்­கா­ர­ண­மாக நிதி முகா­மைத்­துவம் சரி­வர நிர்­வ­கிக்­கப்­ப­டு­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

மேலும் கோல்டன் கீ வங்­கியில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மோச­டிகள் தொடர்பில் விசா­ரணை செய்­வ­தற்கு ஓய்வுப் பெற்ற நீதி­ய­ரசர் தலை­மை­யி­லான குழு­வொன்றை நிய­மிக்­க­வுள்ளேன். இத­னூ­டாக குறித்த மோச­டி­க­ளுடன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­க­ளுக்கு சட்ட ரீதி­யாக தண்­டனை வழங்க நட­வ­டிக்கை எடுப்பேன் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கோல்டன் கீ வங்கி வைப்­பா­ளர்­க­ளுக்கு உரிய நிதித்­தொ­கையை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேலும் அங்கு உரை­யாற்­று­கையில்,

கோல்டன் கீ வங்கி நிதி ரீதி­யாக பின் தள்­ளப்­பட்­டதன் கார­ண­மாக குறித்த வங்­கியில் வைப்­பி­லிட்ட வைப்­பா­ளர்கள் பொரு­ளா­தார ரீதி­யா­கவும் சமூக ரீதி­யா­கவும் பல்­வேறு சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­தனர். இதன்­கா­ர­ண­மாக தமது வாழ்க்­கையை கொண்டு செல்ல முடி­யாத சூழல் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

அத்­துடன் மன­த­ளவில் பலர் பாதிக்­கப்­பட்­டனர். இதனால் பலர் தமது உயிரை பணயம் வைத்­தனர். நாட்டில் பொரு­ளா­தார துறை­யிலும் பாரிய சிக்கல் ஏற்­பட்­டது.

இந்­நி­லையில் நாட்டின் வங்­கிகள் தொடர்­பி­லான நிதி செயற்­பாடுக்ள் தொடர்பில் நாட்டு அர­சாங்­கமே பொறுப்பு கூற­வேண்டும். நாட்டின் வங்­கிகள் ரீதி­யான நிதி பிரச்­சி­னைகள் தொடர்பில் அர­சாங்­கத்­தினால் ஒரு­போதும் தட்­டிக்­க­ழித்து செயற்­பட முடி­யாது.

அதே­போன்று அர­சாங்­கத்தை மீறி எந்­த­வொரு தனியார் நிறு­வ­னத்­தி­னாலும் செயற்­பட முடி­யாது. இது சர்­வ­தேச நாடு­க­ளிலும் பர­வ­லாக அமு­லாக்­கப்­பட்டு வரும் செயற்­பா­டாகும். அரச நிதி துறை சார்ந்த முகா­மைத்­துவம் சரி­வர கடைப்­பி­டிக்­கப்­ப­டா­மையின் கார­ண­மா­கவே கோல்டன் கீ போன்ற சர்ச்­சைகள் ஏற்­ப­டு­கின்­றன.

முன்­னைய ஆட்­சியின் போது நிதி முகா­மைத்­துவம் சரி­வர கடைப்­பி­டிக்க படாது போனா­லும், ஜன­வரி 8 ஆம் திகதி மக்­க­ளினால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட மாற்­றத்தின் பின்னர் நிதி முகா­மைத்­துவம் சரி­வர பேணப்­பட்­டது.

மேலும் மைத்­திரி- – ரணில் உறவின் கார­ண­மாக நாட்டில் நல்­லாட்­சியும் ஜன­நா­ய­கமும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டதன் விளை­வாக நாட்டின் நிதித்­துறை முகா­மைத்­து­வமும் சரி­வர நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்­றது. இந்த ஆட்சிக் காலத்தின் போது ஊழல் மோச­டிகள் முழு­மை­யாக இல்­லாமல் செய்­யப்­பட்­டுள்­ளது.

ஆகவே கோல்டன் கீ வைப்­பா­ளர்­க­ளுக்கு உரித்­தான சொத்­துக்கள் கட்டம் கட்­ட­மாக வழங்­கு­வ­தற்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.