முஸ்லிம் மக்களுக்கு உதவக் காத்திருக்கிறோம் – இரா. சம்பந்தன்

image

தமிழ், முஸ்லிம் மக்­களின் உறவு பலப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அதற்­காக நாங்கள் முஸ்லிம் மக்­க­ளுக்கு உதவ காத்­தி­ருக்­கிறோம். நடை­பெ­ற­வுள்ள தேர்­தலின் பின் நியா­ய­மா­ன­தொரு தீர்வு ஏற்­ப­டத்தான் போகின்­றது. ஆகவே, நீங்கள் எம்­முடன் இணைந்­துதான் ஆக வேண்டும்.எனவே தான் தமிழ், முஸ்லிம் உறவு பல­மாக்­கப்­பட
வேண்­டு­மென்­பதில் நாம் கண்ணும் கருத்­து­மாக இருக்­கின்றோம். இது எமது எதிர்­பார்ப்பு, என்று தமிழ் தேசியக் கூட்ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரிவித்தார்.

மூதூர் முஸ்லிம் பிர­மு­கர்கள் மற்றும் புத்­தி­ஜீ­வி­க­ளுக்கும் சம்­பந்­த­னுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று அவரின் இல்­லத்தில் கடந்த வியாழன் மாலை நடை­பெற்­றது. இதில் கருத்து வெ ளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நூற்றுக் கணக்­கான முஸ்லிம் பிர­மு­கர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இரா. சம்­பந்தன் நிகழ்வில் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்,
திரு­கோ­ண­மலை மாவட்ட முஸ்லிம் மக்கள் இந்த தேர்தல் காலத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை விசு­வா­சிக்கும் நல்­லெண்­ணத்­துடன் நாடி­வந்­தி­ருப்­ப­தை­யிட்டு தமிழ் மகன் என்ற வகையில் நான் மட்­டற்ற மகிழ்ச்­சி­ய­டை­கிறேன். உங்கள் வர­வினால் தமிழ் முஸ்லிம் மக்­களின் உற­வுக்­கான புதிய பாலம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை ஆத­ரிக்கும் ஆர்­வத்­து­டனும் தீவி­ரத்­து­டனும் நீங்கள் வந்­தி­ருப்­பது தமிழ் முஸ்லிம் உறவில் இம்­மா­வட்­டத்­தி­லி­ருந்து ஒரு புதிய அத்­தி­யாயம் தொடக்க பட போகி­றது என்பதைக் காட்டுகின்றது.

தந்தை செல்­வாவின் பாரம்­ப­ரி­யத்தில் நான் வளர்ந்­தவன். அதனால் முஸ்லிம் தமிழ் உறவை நேசிப்­பவன். நீங்கள் பல்­வேறு வாக்­கு­று­தி­களை கோரிக்­கை­யாக்­கு­கின்­றீர்கள். உங்கள் கோரிக்­கைக்கு அமைய நான் வாக்­கு­று­தி­ய­ளித்தால் அதை நான் நிறை­வேற்ற வேண்டும். எக்­கா­ரணம் கொண்டும் என்­னு­டைய வாக்­கு­று­தியில் பிழை­யேற்­படக் கூடாது. நான் சில விட­யங்கள் பற்றி சிந்­தித்­தி­ருக்­கின்றேன்.

தேசியப் பட்­டி­யலில் மூதூ­ருக்கு ஒரு பிர­தி­நி­தித்­து­வத்தை வழங்க நான் விரும்­பி­னாலும் கூட அது­காலம் கடந்­து­விட்­டது. சில­வே­ளை­களில் இச்­சந்­திப்பு முந்­தி­யி­ருந்தால் நான் அது பற்றி கவனம் செலுத்த வாய்ப்­பி­ருந்­தி­ருக்கும். இருந்த போதிலும் இச்­சந்­திப்­பினால் ஒரு வழி­வகை கிடைக்­குமா? என தேட முயற்­சிக்­கின்றேன்.

எனது எதிர்­பார்ப்பானது இப்­பா­ரா­ளு­மன்ற தேர்­தலில் நாம் பெறக் கூடிய வாக்கு வீதம் நிச்­ச­ய­மாக அதிகரிக்கும். 2004 ஆண்டு தேர்­தலில் 69 ஆயிரம் வாக்­கு­களைப் பெற்­றி­ருந்தோம். அதை­விட இன்று திரு­மலை மாவட்ட தமிழ் மக்கள் மத்­தியில் ஒரு உற்­சா­க­முண்டு. விஷே­ட­மாக ராஜபக் ஷவின் தோல்­விக்கு பிறகு இந்­நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இன்று எமது மக்­க­ளிடம் ஒரு எதிர்­பார்ப்­பி­ருக்­கி­றது. நாம் நல்­ல­தொரு மாற்­றத்தை அடைவோம். என்னைப் பொறுத்­த­வரை அது­வல்ல முக்­கியம். முக்­கி­ய­மா­னது தமிழ் முஸ்லிம் உற­வாகும். இரு சமூ­கங்களுக்கிடையில் பால­மொன்று கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும். இது­வொரு நல்ல ஆரம்பம். நல்ல சந்­தர்ப்பம். அதை நிலை நிறுத்­து­வ­தற்கு நாம் முயற்­சிக்­கின்றோம். இது ஒரு புரட்­சி­க­ர­மான விடயம். எனவே உங்­க­ளது மன­மாற்­றத்தை நாம் வர­வேற்­கின்றோம்.

நான் கடந்­த­வாரம் திரு­கோ­ண­ம­லையின் மூன்­றா­வது ஆசனம் பற்றி பேசி­யது கவ­லை­யீ­ன­மாக அல்ல. எனது கணிப்பு முஸ்லிம் மக்கள் எம்மை ஆத­ரிப்­பதன் மூல­மாக 15 ஆயிரம் வாக்­கு­க­ளுக்கு மேல் எமக்கு அளிப்பாராக இருந்தால் மூன்றாம் இடத்தை நாம் கைப்­பற்­று­வது முடி­யாத ஒரு­வி­ட­ய­மல்ல. எனவே முஸ்லிம் மக்­களின் கணி­ச­மான வாக்கு எமக்கு கிடைக்­கு­மாயின் இரு ஆச­னத்­துடன் போனஸ் ஆச­னமும் எமக்கே கிடைக்கும் வாய்ப்­புண்டு.

நடை­பெ­ற­வுள்ள தேர்­தலின் பின் நியா­ய­மா­ன­தொரு தீர்வு ஏற்­ப­டத்தான் போகின்­றது. ஆகவே நீங்கள் எம்­முடன் இணைந்­துதான் ஆக­வேண்டும். எனவே தான் தமிழ் முஸ்லிம் உறவு பல­மாக்­கப்­பட வேண்­டு­மென்­பதில் நாம் கண்ணும் கருத்­து­மாக இருக்­கின்றோம்.

இது எமது எதிர்­பார்ப்பு, இலக்கு. இன்று இந்த உறவை கட்­டி­யெ­ழுப்பும் நல்ல நோக்­கத்­துடன் இன்று வந்­தி­ருக்­கி­றீர்கள். என்னால் இயன்ற காரி­யங்­களை இதற்­காக நான் செய்வேன். அதில் நீங்கள் சிறி­த­ளவும் சந்­தேகம் கொள்ள வேண்­டி­ய­தில்லை. இந்த சந்­திப்பின் பின் இரா.சம்­பந்தன் அவர்கள் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கையில், த.தே.கூட்­ட­மைப்பின் முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கும் மூதூர் முஸ்லிம் பிர­மு­கர்­க­ளுக்­கு­மி­டையில் ஓர் சந்­திப்பு இடம்­பெற்­றது. சகல விட­யங்­க­ளையும் நாம் மனம் திறந்து பேசி­யுள்ளோம். நல்ல முடி­வுகள் எடுக்­கப்­ப­டு­மென்று நம்­பிக்கை எமக்­குண்டு என்றார்.

இளைஞன் கருத்து
இதேவேளை இந்த சந்திப்பில் இடை நடுவில் கருத்து தெரி­வித்த ஒரு முஸ்லிம் இளைஞன் குறிப்பிடுகையில்
தந்தை செல்­வ­நா­யகம் என்­றெல்லாம் எமது மூத்­த­வர்கள் கூறு­வார்கள். நாங்கள் அவர் வாழ்ந்த காலத்தில் பிறக்­க­வில்லை. எங்கள் காலத்தில் ஒரு தந்தை வாழு­கின்றார் என்றால் அது ஐயா சம்­பந்­த­னா­கிய நீங்­கள்தான். 30 வரு­ட­காலம் நாங்கள் இடை­வெளி கொண்­ட­வர்­க­ளா­கவே இருந்­து­விட்டோம். தந்­தை­யா­கிய தங்கள் தலை­மையில் முஸ்லிம் தமிழ் உறவு மீண்டும் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும் என்றார்.

திடீர் தௌபீக்
இது இவ்வாறு இருக்க கலந்துரையாடலில் திடீர் தெளபீக் கருத்து வெளியிடுகையில்,
ஐயா நீங்கள் உல­கத்­தி­லேயே சிறந்த சட்ட வல்­லுனர். வழியைத் தேடு­வது என்­பது உங்­க­ளுக்கு இல­கு­வான காரியம் என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த இரா.சம்­பந்தன் குறிப்பிடுகையில்

தேர்­த­லின்பின் அர­சி­யலில் முழு­மை­யான மாற்றம் ஏற்­படும். மிகவும் கவ­ன­மான அதி­கா­ரப்­ப­கிர்வு கொண்­டு­வ­ரப்­படும். அதன்பின் நாங்கள் எமது மக்கள் பிரச்­சி­னைக்கு தீர்வு காண முயற்­சிப்போம். நான் உங்­க­ளிடம் ஒரு வினாவைக் கேட்­கிறேன். நீங்கள் பேரம் பேசு­கிறேன் என நினைத்துக் கொள்­ளக்­கூ­டாது. தங்கள் கோரிக்கை விட­யத்தில் நாம் ஒரு ஒழுங்­குக்கு வரு­வோ­மாக இருந்தால் அந்த ஒழுங்கின் மூல­மாக (ஒப்­பந்தம்) முஸ்லிம் மக்­க­ளு­டைய எத்­தனை வீத வாக்­குக்­களை த.தே.கூட்­ட­மைப்பு பெற­மு­டியும் என்று கலந்துரையாடலில் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த திடீர் தௌபீக் நீங்கள் இம்­மா­வட்­டத்தில் எத்­த­னை­யா­யிரம் வாக்­கு­களைப் பெறு­வீர்கள் என்று சம்பந்தனிடம் வினவினார்.

தௌபீக்கின் கேள்விக்கு சம்­பந்தன் பதிலளிக்கையில்;
நாங்கள் இம்­மா­வட்­டத்­தி­லுள்ள தமிழ் மக்­க­ளு­டைய வாக்­குக்­களை முழு­மை­யாகப் பெறுவோம். சுமார் 65 ஆயிரம் வாக்­கு­களை நாம் பெற முடியும். 2004 ஆம் ஆண்டு தேர்­தலில் 68 ஆயிரம் வாக்­குக்­களைப் பெற்றோம் என்று குறிப்பிட்டார்.

எனினும் இதன் போது குறிப்பிட்ட தௌபீக் 2012 மாகாண சபை தேர்­தலில் நீங்கள் 44 ஆயிரம் வாக்­கு­களைப் பெற்­றி­ருந்­தீர்களே என்று வினவினார்.

அதற்கு பதிலளித்த சம்­பந்தன்
அது ஒரு முழு­மை­யான வாக்­க­ளிப்பு வீத­மல்ல என்று குறிப்பிட்டார்.

இதன்போது முஸ்லிம் பிரதிநிதியொருவர் குறிப்பிடுகையில்,

2012 ஆண்டு தேர்­தலில் 44 ஆயிரம் வாக்குகள் த.தே.கூட்­ட­மைப்­புக்கு கிடைத்தன. 43 ஆயிரம் வாக்குகள் முஸ்லிம் காங்­கி­ர­ஸூக்கு கிடைத்தன. 24 ஆயிரம் வாக்குகள் ஐ.தே.கட்­சிக்கு கிடைத்தன. அந்த வகையில் தங்­க­ளிடம் 44 ஆயிரம் வாக்குகள் ஏல­வே­யுண்டு. ஆயிரம் வாக்குகள் சரா­ச­ரி­யாக கூடி­யி­ருக்­கலாம். 50 ஆயிரம் வாக்கு வங்கி உங்­க­ளி­ட­முண்டு. தற்­பொ­ழுது ஐ.தே.கட்­சியின் அலை அதி­க­ரித்­தி­ருப்­பதால் இந்­நி­லைமை ஆராய்ந்து பார்த்துக் கொள்­கிறோம் என்றார்.

இந்நிலையில் திடீர் தௌபீக் எம்.பி. குறிப்பிடுகையில்;
சம்­பந்தன் ஐயா மூதூரில் வந்து முஸ்லிம் மக்­க­ளுக்கு ஒரு வார்த்தை கூறினால் போதும். சுமார் 15 ஆயிரம் வாக்­குள்ள மூதூரில் நாங்கள் 10 ஆயிரம் வாக்குகளே த.தே.கூட்­ட­மைப்­புக்குப் பெற்­றுத்­த­ருவோம். நீங்கள் கூறப் போகின்ற வார்த்­தைகள் தான் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லுள்ள தமிழ் முஸ்லிம் உறவை உச்ச நிலை அடையச் செய்யும்.

கடந்த இரண்டு நாட்­க­ளாக பிர­தமர் ரணில் மற்றும் பல ஐ.தே.க முக்­கி­யஸ்­தர்கள் தொலை­பே­சியில் எம்மை அழைக்­கி­றார்கள். எம்­முடன் வாருங்கள் எம்.பி.பதவி தரு­கி­றோ­மென்று கூறுகின்றார்கள். எமது நோக்கம் அமைச்சர் பதவி பெறு­வ­தல்ல. முஸ்லிம் தமிழ் உறவை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மென்ற ஆதங்­கத்­து­ட­னையே தங்­களை நாடி வந்­துள்ளோம். மூதூர் பிர­தேசம் முஸ்லிம் காங்­கி­ரஸின் செல்­வாக்­குக்கு உட்­பட்ட பிர­தேசம். ஆனால் இம்­முறை தேர்­தலில் நாங்கள் விரும்­பிய ஒரு வேட்­பா­ளரை அவர்கள் நிறுத்த விரும்­ப­வில்லை. எமது ஏகோ­பித்த முடிவை தலைவர் உதா­சீனம் செய்து விட்டார். கிண்­ணியா வேட்­பாளர் ஒரு­வரை வெல்­ல­வைக்க வேண்­டு­மென்­ப­தற்­கா­கவே மூதூர் மக்­களின் விரும்­பத்தை அவர் நிறை­வேற்­ற­வில்லை.

ஆகவே எமது முழு இலக்கு மூதூர் முஸ்லிம் காங்­கிரஸ் வேட்­பா­ளரை தோற்­க­டிப்­ப­தாகும். மூதூ­ருக்கு பிர­தி­நி­தித்­துவம் தர­மாட்டேன் என்று சொன்­ன­தற்­கு­ரிய காரணம் மூதூர்­மக்கள் வெற்றி பெற்று விடு­வார்கள் என்ற பயத்தின் கார­ண­மாகும். முஸ்லிம் காங்­கி­ர­ஸூக்­காக உயிர் தியாகம் செய்­த­வர்கள் மூதூர் மக்கள். அத்­த­கைய மக்­களின் கோரிக்கை இத்­தேர்­தலில் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. நீங்கள் ஒரு சிறிய வாக்­கு­றுதி தாருங்கள். முழு மூதூ­ரையும் கூட்­ட­மைப்பின் பக்கம் நாம் திருப்பிக் காட்­டுவோம். நீங்கள் மூதூரில் உள்ள ஒரு­வ­ருக்கு தேசி­யப்­பட்­டி­யலில் இடந்­த­ருவேன் என்று வாக்­கு­றுதி தாருங்கள், மாபெ­ரிய மேடை போட்டு அதில் வாக்­கா­ளர்­களைத் திருப்பிக் காட்­டுவோம். இதை நாம் கூறு­வது வாக்கு தரு­வ­தற்காக மட்டும் என்று கரு­த­வேண்டாம். தமிழ் முஸ்லிம் உறவை திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லி­ருந்து ஆரம்­பிப்­ப­தற்கு இதை­யொரு நல்ல வாய்ப்­பாக பயன்­ப­டுத்­துவோம். மூன்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை நீங்கள் இம்­மா­வட்­டத்­தி­லி­ருந்து பெற­மு­டியும்.

கிண்­ணியா பிர­தே­சத்தில் முஸ்லிம் காங்­கி­ர­ஸூக்கு மிக மோச­மான வீழ்ச்­சி­யொன்று ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அம்­மக்கள் தற்­பொ­ழுது சிந்­திக்­கி­றார்கள். தங்­க­ளுக்­கென நல்­ல­தொரு தலை­மைத்­துவம் இல்­லை­யென்று இல்லை என்று கருதுகின்றனர். எனவே நல்­ல­தொரு முடிவை நாங்கள் உடன் எடுக்க வேண்­டு­ம் என்றார்.
கலந்துரையாடலில் த.தே.கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தனுடன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான க.துரைரெட்ணசிங்கம் மற்றும் வேட்பாளர்களான க.கனகசிங்கம், க.ஜீவருபன் மற்றும் முன்னாள் நகரசபைத் தலைவர் க.செல்வராஜா, உபதலைவர் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் வாமதேவன், திருச்செல்வம், கிளைத் தலைவர் கே.சத்தியசீவராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.