பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வது ஊழல், மோசடிக்காரர்களையா அல்லது நேர்மையானவர்களையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் – ஆசாத் சாலி

Unknown_Fotor_Coll

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரிவு செய்யப் போவது மோச­டிக்­கா­ரர்­க­ளையா? அல்­லது நேர்­மை­யான திற­மை­யா­ன­வர்­க­ளையா? என்­பதை மக்கள் தீர்­மா­னிக்க வேண்டும். திரு­டர்­க­ளுக்கும் மோச­டிக்­கா­ரர்­க­ளுக்கும் எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கா­த­மைக்கு மன்­னிப்பு கோரிய மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அவர்­க­ளு­டனே தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றார் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் மத்­திய மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான அஸாத் சாலி தெரி­வித்தார்.

அதி­கா­ரத்தைப் பகிர்ந்து ஐக்­கி­யப்­படும் இயக்கம் ஏற்­பாடு செய்­தி­ருந்த செய்­தி­யாளர் மாநாடு நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம் பெற்­றது. இதன் போது கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ஊழல், மோச­டிக்­கா­ரர்கள் மற்றும் போதைப் பொரு­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­களின் பெயர்கள் சுதந்­திரக் கட்சி வேட்பு மனுவில் இடம்­பெ­றாது என ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருந்தார். என்­றாலும் தற்­போது அப்­ப­டி­யா­ன­வர்கள் எவ்­வாறு இடம் பெற்­றார்கள் என்­பதை ஜனா­தி­பதி நாட்டு மக்­க­ளுக்குத் தெளி­வாகக் கூறி­யுள்ளார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லாளர் சுசில் பிரேம் ஜயந்­தவை அச்­சு­றுத்­தியே மஹிந்த ராஜபக் ஷ உட்­பட மோச­டிக்­கா­ரர்­களின் பெயர்கள் வேட்­பு­ம­னுவில் இடம்­பெற்­றுள்­ளன.சுசில் பிரேம்­ஜ­யந்­தவும் தன்­னு­டைய குற்­றங்­களை மறைத்துக் கொள்­வ­தற்கு அதற்கு அனு­ம­தித்­துள்ளார்.

மேலும் மஹிந்த ராஜபக் ஷ தனது மோச­டி­களை மறைப்­ப­தற்கும் தனக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்கும் போது பாரா­ளு­மன்றச் சிறப்­பு­ரி­மையைப் பயன்­ப­டுத்­தவும் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றார்.

அவர் பாரா­ளு­மன்றம் சென்­றாலும் கூடி­ய­காலம் இருக்க முடி­யாது. அவ­ருக்கு எதி­ராக பாரிய குற்றச் சாட்­டுக்கள் இருக்­கின்­றன. அவை விசா­ரிக்­கப்­படும் பட்­சத்தில் அவர் சிறைச்­சா­லைக்கு செல்வார்.

இந்த நாட்டை ஆட்­சி­பு­ரிந்த சகல ஜனா­தி­ப­தி­க­ளுக்கும் குற்­றச்­சாட்­டுக்கள் கூறப்­பட்­டன. என்­றாலும், அவர்­க­ளது குடும்­பங்கள் மீது குற்­றச்­சாட்­டுக்கள் இருக்­க­வில்லை. ஆனால் மஹிந்த ராஜபக் ஷ மீதும் அவர் குடும்­பத்­தினர் மீதும் பாரிய குற்­றச்­சாட்­டுக்கள் இருக்­கின்­றன.

கடந்த காலத்தில் ஊழல், மோச­டி­களில் தொடர்­பு­பட்­ட­வர்கள் அனை­வரும் களமி றங்­கி­யுள்­ளனர். இதனை சிறந்­த­தொரு சந்­தர்ப்­ப­மாக பயன்­ப­டுத்திக் கொண்டு எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் நல்­ல­தொரு பாடத்தைக் கற்­பிக்க வேண்டும். அத்­துடன் இவர்­க­ளுக்கு துணை­யாக இருந்த சுசில் பிரேம் ஜயந்­த­வுக்கும் கொழும்பு மாவட்ட மக்கள் பாடம் கற்­பிக்க வேண்டும்.

மேலும் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி இலங்கைப் போக்­கு­வ­ரத்துச் சபைக்கு சொந்­த­மான பஸ்­களை பயன்­ப­டுத்­தி­ய­மைக்­காக கொடுக்க இருந்த கடன்­களை செலுத்­தி­ய­தாக அனுர பிரி­ய­தர்­ஷன யாப்பா அண்­மையில் கூறி­யுள்ளார். ஆனால் இது­வரை கடன்­களை செலுத்தவில்லை. முடியுமானால் அதற்குரிய பற்றுச் சீட்டுக்களுடன் பகிரங்க விவாதத்துக்கு வரவேண்டும்.

எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வது ஊழல், மோசடிக்காரர்களையா அல்லது நேர்மையானவர்களையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றார்.