அம்பாரை, மகா ஓயா, தெகியத்தகண்டிய பிரதேச மக்களினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் மூவருக்கும் மகத்தான வரவேற்பு!

3_Fotorமுஹம்மட் றின்ஸாத் 
அம்பாரை, மகா ஓயா, தெகியத்தகண்டிய பிரதேசங்களில் உள்ள சிங்கள மக்களினால் அம்பாரை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் மூவருக்கும் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் நடைபெற்றது.
அம்பாரை, மகா ஓயா, தெகியத்தகண்டிய பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் மூவரும் சிறப்புரை ஆற்றியதுடன் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
அத்துடன் 2015 பாராளுமன்ற தேர்தலில் தங்களுடைய வாக்கினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கே வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.
 2_Fotor 4_Fotor