அர­சாங்க ஊழி­யர்­களின் ஜூலை மாதச் சம்­பளம் எதிர்­வரும் 17 ஆம் திகதி!

images

ரமழான் பண்­டி­கை­யை­யொட்டி அர­சாங்க ஊழி­யர்­களின் ஜூலை மாதச் சம்­பளம் எதிர்­வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்­கி­ழமை வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான சுற்­று­நி­ருபம் திறைசேரிச் செயற்­பா­டுகள் பணிப்­பாளர் நாயகம் எம்.எஸ்.டி.ரண­சி­றி­யினால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

4/2015 இலக்­கமும், 2015.07.08 ஆம் திக­தி­யு­மிட்ட திறைசேரிச் செயற்­பா­டுகள் சுற்­று­நி­ரு­பத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளதாவது, 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திக­திய ரமழான் பண்­டி­கையின் பொருட்டு ஜூலை மாதச் சம்­ப­ளத்தை முன்­கூட்­டியே வழங்­கு­மாறு விடுக்­கப்­பட்ட வேண்­டு­கோளை கவ­னத்­தி­லெ­டுத்து, வேண்­டு­கோள்­விடும் இஸ்­லா­மிய அரச ஊழி­யர்­களின் சம்­ப­ளத்தை 17 ஆம் திகதி வழங்­கு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

மேற்­படி கொடுப்­ப­ன­வுக்­கு­ரிய கட்­டு­நி­தியை திறை­சேரிக்குக் கிடைக்கப் பெறும் வேண்­டு­கோ­ளுக்­க­மைய வழங்­கு­வ­தற்கு ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இதன் பிர­காரம் இக்­கொ­டுப்­பவை ஜூலை 17 ஆம் திகதி வழங்­கு­வ­தற்­கான ஏற் ­பா­டு­களை மேற்­கொள்­ளவும்.
சகல அமைச்­சுக்­களின் செய­லா­ளர்கள், சகல மாகாண சபை­களின் செய­லா­ளர்கள், திணைக்­களத் தலை­வர்கள், மாவட்டச் செய­லா­ளர்கள், இரா­ணுவ, கடற்­படை, விமா­னப்­படைத் தள­ப­திகள் ஆகி­யோ­ருக்கும் இச்­சுற்­று­நி­ருபம் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

புனித ரமழான் பண்­டி­கை­யை­யொட்டி அரச ஊழி­யர்­களின் ஜூலை மாத சம்­ப­ளத்தை முன்­கூட்­டியே வழங்­கு­வ­தற்கு நட­வடிக்கை மேற்கொண்ட அரசுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், இவ்விடயம் தொடர்பில் முன்கூட்டியே கோரிக்கை விடுத்த தொழிற் சங்கங்களுக்கும் முஸ்லிம் அரச ஊழியர்க ளும் நன்றி தெரிவித்துள்ளன