சுசில் பிரே­ம்­ஜ­யந்த கொழும்பு மாவட்­டத்தில் தலைமை வேட்பாளராக போட்­டி­யி­ட­வுள்ளார்.!

images

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் கொழும்பு மாவட்ட குழுத் தலை­வ­ராக சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரே­ம்­ஜ­யந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அந்த வகையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லா­ளரும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தேசிய அமைப்பா­ள­ரு­மான சுசில் பிரே­ம்­ஜ­யந்த எதிர்வரும் பொதுத் தேர்­தலில் கொழும்பு மாவட்­டத்தில் தலைமை வேட்பாளராக போட்­டி­யி­ட­வுள்ளார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சார்பில் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் நேற்று வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்ளனர்.

விமல் வீரவன்ச,வாசுதேவ நாணயக்கார பந்துல குணவர்த்தன டலஸ் அழகபெரும உள்ளிட்டோர் நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்ளனர். இதேவேளை எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் தனித்து போட்­டி­யிடவுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தலை­மை­யி­லான ஜன­நா­யகக் கட்சி நேற்றைய தினம் வேட்பு மனுக்களை கொழும்பு மாவட்டத்தில் தாக்கல் செய்துள்ளது.அதன்­படி பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா கொழும்பு மாவட்­டத்தில் போட்­டி­யி­ட­வுள்ளார்.