ஐ.ம.சு.மு.சார்பில் வேட்­பா­ளர்­களின் பட்­டி­யலைத் தயா­ரிப்­பதில் தொடர்ந்தும் இழு­பறி !

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களின் பட்­டி­யலைத் தயா­ரிப்­பதில் தொடர்ந்தும் இழு­பறி நிலை­மையே நீடித்து வரு­கின்­றது.

விசே­ட­மாக, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷ­வுக்கு ஐக்­கிய மக் கள் சுதந்­திர முன்­ன­ணியில் வேட்­பு­மனு கிடைக்­குமா என்­பதில் தொடர்ச்­சி­யாக முடி­வில்­லாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது.

நேற்­றைய தினமும் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யிலும் மஹிந்த ரா௪­பக்ஷ தலை­மையில் தனித்­த­னி­யாக முக்­கிய சந்­திப்­புக்கள் இடம் பெற்­றுள்­ளன. எனினும் எந்தத் தரப்­பிலும் இது­வரை எவ்­வி­த­மான தீர்­மா­னங்­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அனு­ர­பி­ரி­ய­தர்­ஷன யாப்­பாவும், தேசிய அமைப்­பாளர் சுசில் பிரே­ம­ஜ­யந்­தவும் நேற்­றுக்­காலை சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளனர். இதன் போது ஐ.ம. சு.வின் வேட்­பு­ம­னுவை தயா­ரிப்­பது குறித்தும் வேட்­பா­ளர்­களை தெரிவு செய்­வது தொடர்­பா­கவும் ஆழ­மான பேச்­சு­வார்த்­தைகள் இடம் பெற்­றுள்­ளன.

மஹிந்த ராஜ­பக்ஷ விவ­காரம் தொடர்­பாக இதன்­போது பிரஸ்­தா­பிக்­கப்­பட்ட நிலை­யிலும் இறுதி முடிவு எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை. மறு­புறம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷ­வுக்கும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான முக்­கிய சந்­திப்பும் நேற்­றைய தினம் கொழும்பில் இடம் பெற்­றுள்­ளது.

இதன்­போது இறு­தி­நே­ரத்தில் ஒரு­வேளை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் ராஜ­ப­க்ஷ­வுக்கு வேட்­பு­மனு கிடைக்­கா­விடின் எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை எடுப்­பது என்­பது தொடர்பில் விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது.

இது இவ்வாறு இருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இரவும் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அந்த சந்திப்பிலும் சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம்ஜயந்த மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்சன யாப்பா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது வேட்பாளர் பட்டியலை தயாரிப்பது தொடர்பாக நீண்ட நேரம் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வையும் இணைத்து பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு பாரிய முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற போதும் அவை இது­வரை கைகூ­டா­த­நி­லை­மை­யா­கவே காணப்­ப­டு­கின்­றது.

நேற்­றைய தினம் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் சில மாவட்­டங்­க­ளுக்­கான வேட்­பு­ம­னுக்­களில் கைச்­சாத்­தி­டு­வ­தற்கு வேட்­பா­ளர்கள் அழைக்­கப்­பட்­டி­ருந்த போதும் இறு­தியில் அந்த நிகழ்வை ஜனா­தி­பதி இரத்து செய்­துள்ளார்.

அதா­வது மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சார்பில் வேட்பு மனு வழங்கும் விவ­கா­ரத்தில் காணப்­ப­டு­கின்ற இழு­பறி நிலையே இந்த நிகழ்வு பிற்­போ­டப்­பட்­ட­மைக்­கான காரணம் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ தனது முக்­கிய ஆத­ர­வா­ளர்­களின் பெயர்கள் அடங்­கிய பட்­டியல் ஒன்றை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு வழங்­கி­யுள்­ள­தா­கவும், அந்தப் பட்­டி­யலில் பெயர் இடம் பெற்­றுள்ள அனை­வ­ருக்கும் வேட்பு மனு வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் அவர் கோரி­யுள்­ள­தா­கவும், தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எனினும் ஜனா­தி­பதி இந்த விட­யத்தில் இது­வரை தீர்­மானம் எடுக்­காமல் இருப்­ப­தா­கவும் அர­சியல் வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

ஆனால் குறித்த பட்­டி­யலில் இடம் பெற்­றுள்ள அனை­வ­ருக்கும் ஐக்­கிய மக்­கள்­சு­தந்­திர முன்­ன­ணியின் சார்பில் வேட்பு மனு வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்று மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ உறு­தி­யாக இருப்­ப­தா­கவும் தக­வல்கள் தெரி­வித்­தன.

இந்­நி­லை­யி­லேயே மைத்­திரி மற்றும் மஹிந்த தரப்­பி­ன­ருக்­கி­டையில் தற்­போ­தைய நிலை­மையில் முரண்­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ள­தா­கவும், தெரி­கி­றது. ஒரு வேளை மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷ­வுக்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் வேட்­பு­மனு கிடைக்­கா­விடின் அவர் தனித்து கள­மி­றங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது.

இந்த விவ­காரம் தொடர்பில் மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன குறிப்­பி­டு­கையில்ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ எதிர்­வரும் தேர்­தலில் போட்­டி­யி­டு­வது உறு­தி­யாகும். அதனை யாராலும் தடுக்க முடி­யாது. மஹிந்த ராஜ­பக்ஷ பிர­த­ம­ராக நிய­மனம் பெற்று அவர் தலை­மையில் புதிய ஆட்சி அமைக்­கப்­ப­டு­வதை எவரும் தடுக்க முடி­யாது. மஹிந்த ராஜ­பக்ஷ குரு­ணாகல் மாவட்­டத்தில் போட்­டி­யி­டு­வதும் உறு­தி­யா­கி­யுள்­ளது.

சிலர் கூறு­வது போல் இறுதி நேரத்தில் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வேட்­பு­ம­னுவை வழங்க மாட்டார் என்று தெரி­விக்­கப்­ப­டு­வதில் எந்த உண்மையும் இல்லை. அவருக்கு நிச்சயம் ஐ.ம.சு.வில் வேட்புமனு கிடைத்தே தீரும். நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டே வருகின்றோம். சில விடயங்களில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குத் தவறமாட்டார் என உறுதியாக நம்புகின்றோம் என்றார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல்கள் எதிர்வரும் திங்கட்கிழமை 13 ஆம் திகதி நண்பகலுடன் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.