நாம் மீண்டும் ஆட்­சி­ய­மைத்தால் சர்­வ­தேச அழுத்­தங்­களை எதிர்­கொள்ளத் தயார் – சுசில்

 

susilஇலங்கை மீதான சர்­வ­தேச விசா­ரணை அறிக்கை தொடர்பில் புதிய நகர்­வு­களை ரணில் தலை­மை­யி­லான அர­சாங்­கமே மேற்­கொண்டு வரு­கின்­றது.

 

இந்­நி­லையில் புதிய அர­சாங்­கமே அழுத்­தங்­க­ளுக்கு முகம்­கொ­டுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பா­ளரும் ஐக்­கிய மக்கள் சுதந்­தரக் கட்­சியின் செய­லா­ள­ரு­மான சுசில் பிரேம ஜயந்த தெரி­வித்தார். நாம் மீண்டும் ஆட்­சி­ய­மைத்தால் சர்­வ­தேச அழுத்­தங்­களை எதிர்­கொள்ளத் தயார் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்­தரக் கட்­சி­யினால் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை அறிக்கை வெளி­வ­ரு­வது தொடர்பில் எமது ஆட்­சியில் இருந்தே அழுத்­தங்கள் கொடுக்­கப்­பட்­டு­வந்­தன. ஆனால் நாம் எமது ஆட்­சியில் சரி­யான முறையில் சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கு முகம் கொடுத்தோம். இவ்­வ­ருடம் மார்ச் மாதம் ஐ.நா. விசா­ரணை அறிக்கை வெளி­யி­டப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டது.

எனினும் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­வுடன் நிலை­மை­களும் சற்று மாற்­ற­ம­டைந்­துள்­ளது. புதிய அர­சாங்­கத்தின் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஐக்­கிய நாடுகள் ஆணைக்­கு­ழுவின் தலைமை உறுப்­பி­னர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி மார்ச்சில் வெளி­வர­ வி­ருந்த விசா­ரணை அறிக்­கையை எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் வரையில் பிற் போட வலி­யுறுத்தி னார். அதற்­க­மைய எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் இந்த அறிக்­கையை ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­குழு வெளி­வி­ட­வுள்­ளது.

ஆனால் இந்த அறிக்கை தொடர்பில் முழு­மை­யான தாக்­கத்­தையும் புதிய அர­சாங்­கமே பொறுப்­பேற்க வேண்டும். சர்­வ­தேச நாடு­க­ளுடன் மேற்­கொண்ட பேச்­சு­வார்த்­தைகள் ரணில் தலை­மை­யி­லான புதிய அர­சாங்­கத்­துக்கே தெரியும். எவ்­வா­றான உடன்­ப­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன? ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் அமைப்­புடன் எவ்­வா­றான இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டுள்­ளன என்­பது எமக்குத் தெரி­யாது. ஆகவே இந்த அர­சாங்­கமே இவற்றை கையாள வேண்டும். ஆனால் இம்­முறை பொதுத் தேர்­த­லுடன் நிச்­ச­ய­மான ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்­படும். மீண்டும் எமது அர­சாங்கம் ஆட்­சியை கைப்­பற்றும். இதில் எந்த சந்­தே­கமும் இல்லை. அவ்வாறான நிலைமையில் சர்வதேசம் மீண்டும் எமது அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க முயற்சிகளை எடுக்கும் என்பது எமக்கு தெரியும். ஆகவே இந் நிலையில் எந்த அழுத்தங்களுக்கும் நாம் முகம் கொடுக்க தயாராகவே உள்ளோம் என்றார்.