பொதுத் தேர்தலின்போது பொலிஸார் செயற்பட வேண்டிய விதம் குறித்து விளக்கமளிக்குமாறு பொலிஸ் மாஅதிபரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை!

HUMAN-RIGHTS-COMMISSON-OF-SRILANKA.

எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது பொலிஸார் செயற்பட வேண்டிய விதம் குறித்து விளக்கமளிக்குமாறு பொலிஸ் மாஅதிபரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

தமது எழுத்து மூல கோரிக்கை பொலிஸ் மாஅதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சட்டப் பிரிவு செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கூறியுள்ளார்.

தேர்தலுக்காக வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக் தெளிவூட்டல்களை வழங்கவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.