மகிந்த குருநாகலில் ; கம்பஹாவில் கோத்தபாய !

 

 

images

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் இடம்­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­தலில் குரு­ணாகல் மாவட்­டத்தில் இருந்து போட்­டி­யி­டலாம் என தக­வல்கள் வெளி­வந்­துள்ள நிலையில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ கம்­பஹா மாவட்டம் ஊடாக கள­மி­றங்க உள்­ள­தாக அர­சியல் வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

 

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ரஜ­பக்ஷ இது தொடர்பில் எவ்­வித உத்­தி­யோக அறி­விப்­புக்­க­ளையும் விடுத்­தி­ராத போதும்,பெரும்­பாலும் அவர் அர­சி­ய­லுக்கு வரக்­கூ­டிய வாய்ப்­புக்கள் உள்­ள­தா­கவும் அவ்­வாறு அவர் வருகை தரும்­பட்­சத்தில் கம்­பஹா மாவட்­டத்தில் போட்­டி­யி­ட­வுள்­ள­தா­கவும் அந்த வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

அத்­துடன் ராஜ­பக்ஷ குடும்­பத்தின் மற்­றொரு பிர­தான நப­ராக கரு­தப்­படும் கம்­பஹா மாவட்­டத்தின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பஷில் ராஜ­பக் ஷ இம்­முறை தேர்­தலில் போட்­டி­யிட மாட்டார் எனவும் அவ­ருக்கு தேசி­யப்­பட்­டியல் ஊடாக பாரா­ளு­மன்­றத்­துக்கு வரும் வகையில் இணக்கப் பாடொன்று எட்­டப்­பட்­டுள்­ள­தா­கவும் அர­சியல் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ குரு­ணாகல், இரத்­தி­ன­புரி மற்றும் கம்­பஹா ஆகிய மாவட்­டங்­களில் ஒன்றில் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அவ­ரது ஆத­ரவு தரப்பினர் முன்­ன­தாக தெரி­வித்­தனர். இந் நிலையில் மஹிந்த ராஜ­பக் ஷ குரு­ணா­கலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் 90 வீதம் இருப்­ப­தா­கவும் அதற்­கான அனைத்து நடவ­டிக்­கை­களும் ஏற்­பா­டா­கி­விட்­ட­தா­கவும் முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்­க­நா­யக்க தெரி­வித்தார்.

இந் நிலை­யி­லேயே மஹிந்த ராஜ­பக்ஷ குரு­ணா­கலில் தேர்­தலில் கள­மி­றங்கினால் கோத்­த­பாய ராஜ­பக் ஷ கம்­பஹா மாவட்டம் ஊடாக கள­மி­றங்க உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சியல் தக­வல்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

மஹிந்த ஆத­ரவு தரப்­பினர் அவர் குரு­ணா­கலில் போட்­டி­யி­டுவார் எனக் கூறினாலும் நேற்று மாலை வரை அதனை மஹிந்த ராஜ­ப­க் ஷவோ அல்­லது கட்­சியின் பொதுச் செய­லா­ளரோ உறுதி செய்­ய­வில்லை.

எவ்­வா­றா­யினும் மஹிந்­த­வுக்கு நெருங்­கிய தக­வல்­களின் பிர­காரம், இம்­முறை மஹிந்த ராஜ­பக்ஷ அம்­பாந்­தோட்டை மாவட்டத்தை பிர­தி­னிதித்துவம் செய்து தேர்­தலில் கள­மி­றங்க மாட்டார் என தெரி­கின்­றது.தனது மகன் நாமல் ராஜ­ப­க் ஷ­வுக்கு அம்­மா­வட்­டத்தில் இடம் வழங்கல் உள்­ளிட்ட பல கார­ணங்­களை மையப்­ப­டுத்­தியே அவர் அங்கு போட்­டி­யி­டாது வேறு ஒரு மாவட்­டத்தில் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அந்த தரப்­பினர் குறிப்­பி­டு­கின்­றனர்.

இதே­வேளை, முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­ப­க் ஷவின் மீது சுமத்­தப்­பட்­டுள்ள நிதி­மோ­சடி குற்­றச்­சாட்­டுகள், கடந்த ஜனா­தி­பதித் தேர்தல் தோல்வி மற்றும் தோல்­வியை தொடர்ந்து நாட்டை விட்டு வெளி­யே­றி­யமை உள்­ளிட்­டவை கார­ண­மாக அவர், இம்­முறை தேர்­தலில் போட்­டி­யி­ட­மாட்டார் என்றும் தேசி­யப்­பட்­டியல் ஊடாக பாரா­ளு­மன்­றத்­துக்கு வருவார் என்றும் தெரி­ய­வ­ரு­கின்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் பொதுச்­செ­ய­லாளர் சுசில் பிரேம்­ஜ­யந்­த­வுக்கும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­ப­க் ஷ­வுக்கும் இடையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் சந்­திப்­பின்­போதே இந்த இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இத­னி­டையே எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஊழல் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­வர்­க­ளுக்கு ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியில் வேட்­பு­மனு வழங்­கப்­ப­ட­மாட்­டாது என தெரி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் முன்னாள் பாரா­ளு­­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மேர்வின் சில்வா, துமிந்த சில்வா, சஜின் வாஸ் குண­வர்த்­தன ஆகி­யோ­ருக்கு ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியில் வேட்­பு­மனு வழங்­கப்­ப­ட­மாட்­டாது என கட்­சியின் உள்­வீட்டு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.