முன்னேஸ்வரத்தில் சந்திரிக்கா ….!

images

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சிலாபத்திலுள்ள முன்னேஸ்வரம் கோயிலுக்குச் சென்று அங்கு விசேட பூஜை வழிபாடொன்றில் ஈடுபட்டார்.
 
தனது பிறந்தநாளையிட்டு அவர் இந்த பூஜை வழிப்பாட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, அவரிடம் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான சில கேள்விகள் எழுப்பட்ட போதிலும் அவற்றுக்கு அவர் பதிலளிக்கவில்லை. ‘இது அரசியல் கதைக்கவேண்டிய இடமில்லை’ என்று கூறிய அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.