அர்ஜுன ரணதுங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் என்பது தனக்கு தெரியாது – சுசில்

susilஅமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் என்பது தனக்கு தெரியாதென அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பொது செயலாளருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் அர்ஜுன ரணதுங்க குறித்து எழுப்பிய கேள்விக்கு சுசில் இவ்வாறு பதிலளித்துள்ளார். 

அர்ஜுன ரணதுங்க நாடாளுமன்றத்தை கலைக்கும் வரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. எனவே அர்ஜுன ரணதுங்க கூறும் கருத்துக்கள் எதுவும் செல்லுபடியாகாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

எப்படியிருப்பினும் அர்ஜுன ரணதுங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அத்தனகல்ல பிரதேச தொகுதி அமைப்பாளராக ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.