மோசடிக்காரர்களை மீண்டும் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யாதிருக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் !

image

மோசடிக்காரர்களை மீண்டும் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யாதிருக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்தார்.

பயனற்றவர்களைப் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை மக்களே வழங்க வேண்டி ஏற்படும் எனவும் அவர் தெளிவூட்டினார்.

மேலும், சூதாட்டக்காரர்கள் மற்றும் எத்தனோல் மதுபான சாலைகளைக் கொண்டவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என வலியுறுத்திய மாதுலுவாவே சோபித்த தேரர், பாராளுமன்றத்திற்குத் தகுதியானவர்களை அனுப்புமாறும் மக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.