விம்பிள்டன் தொடரிலிருந்து நடால் வெளியேற்றப்பட்டார் !

nadal

இரண்டு முறை விம்பிள்டன் சம்பியனான ரபேல் நடால் விம்பிள்டன் தொடரின் இரண்டாம் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

ஜேர்மனியின் டஸ்டின் பிரவுணுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் உலகின் முன்னிலை வீரரான நடால் தோல்வியை சந்தித்துள்ளார்.

கடந்த நாட்களாக உடல் உபாதை காரணமாக அவதியுற்ற நடால் இந்த போட்டியில் சாதிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார்.

ஸ்பானிய வீரரான நடால் இந்த போட்டியில் 7-5 , 3-6 6-4 மற்றும் 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் உலகின் 102 ஆம் நிலை வீரரான பிரவுணிடம் தோல்வியடைந்தார்.

இதேவேளை உலகிள் மற்றுமொரு முன்னணி வீரரான சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் பெரடர் விம்பிள்டன் தொடரின் இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்று மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

சாம் குவாரியுடன் இடம்பெற்ற போட்டியில் 6-4 6-2 மற்றும் 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் பெரடர் வெற்றி பெற்றார்.

ஒரு மணித்தியாலம் மற்றும் 21 நிமிடங்களில் அவுஸ்திரேலிய வீரரான சாம் குவாரியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு பெரடர் தகுதி பெற்றார்.