மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஐ.ம.சு.கூ சார்பில் வேட்புமனு வழங்கத் தீர்மானம் !

mahinda-maithri-970x623

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்புமனு வழங்கத் தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக  சுசில் பிரேமஜயந்த வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.