இரு இலங்கையர்களுக்கு பிரித்தானிய அரசு விருது வழங்கி கௌரவித்தது !

take

பொதுநலவாய அமைப்பிலுள்ள நாடுகளின் இளைய தலைவர்களுக்கான வேலைத்திட்டத்தில் திறைமைகளை வெளிப்படுத்திய இரண்டு இலங்கையர்களுக்கு பிரித்தானிய அரசினால் விருது வழங்கப்பட்டுள்ளது.

காவிந்தியா தென்னகோன் மற்றும் தேஜித சௌபாக்கிய எதிரிசிங்க ஆகியோரே லண்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சமாதானத்தை அடிப்படையாக கொண்டு தெரணியகல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் தாம் பங்கேற்றிருந்ததாக காவிந்தியா குறிப்பிட்டுள்ளார்.