அஷ்ரப் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதில் தீவிரமாக செயற்பட்டவரே ராஜித : நிசாம் காரியப்பர் !

Mayor Nizam 6_Fotor
(அஸ்லம் எஸ்.மௌலானா)
சந்திரிகா அரசாங்கத்தில் பலம் வாய்ந்த அமைச்சராகத் திகழ்ந்த எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதில் தீவிரமாக செயற்பட்ட ஒருவரே ராஜித சேனாரத்னவாவார். இன்று அவர் எமது கட்சியின் தற்போதைய தலைவரான ரவூப் ஹக்கீமை வேண்டத்தகாத வார்த்தைகளினால் விமர்சித்துள்ளார்.
இவ்வாறு கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதிச் செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரி­யப்பர் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு திங்கட்கிழமை இடம்பெற்ற போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட விமர்சனக் கருத்துத் தொடர்பில் மாநகர சபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் கண்டன அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றினார். 
இவ்விடயம் தொடர்பில் முடிவுரை நிகழ்த்துகையிலேயே முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது;
“பதவிக்காக காலத்திற்கு காலம் கட்சி விட்டு கட்சி மாறுகின்ற அமைச்சர் ராஜித, எமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்களை பதவிக்காக மதத்தைக் கூட மாற்றிக் கொள்வார் என்று கூறியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரிய கூற்றாகும். இது ஒட்டு முஸ்லிம்களையும் அவமானப்படுத்துகின்ற ஒரு விசமனத்தனமான கருத்தாகும்.
அமைச்சர் ராஜித, தான் எங்கு இருக்கிறார் என்பது கூட தெரியாமல் தடுமாறுகின்ற ஒரு மட்டரகமான அரசியல்வாதியாவார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பற்றி விமர்சிப்பதற்கு அவருக்கு எந்த அருகதையும் கிடையாது. அதற்கு அவர் தகுதியற்றவர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் பலம் குறித்து ராஜித அச்சப்படுவதையே அவரது கருத்து சுட்டிக்காட்டுகின்றது. சிலவேளை ஹக்கீம் பிரதமராகி விடுவாரோ என்று அவர் பயப்படுகிறார் போல் தெரிகிறது.
முஸ்லிம் தலைமைகளை எப்போதும் இனவாதக் கண்ணோட்டத்துடன் நோக்குவதையே அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.அதனால் தான் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வருவதில் அவர் மிகவும் தீவிரமாக முன்னிலை வகித்திருந்தார்.
பதவிகளுக்காக மதம் மாறிய வரலாறு முஸ்லிம்களிடம் கிடையாது. அது மாற்று சமூகத்தினரிடம் காணப்பட்டுள்ளது. கிறிஸ்தவ பரம்பரையில் வந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, மஹிந்த ராஜபக்ஷ போன்றோரின் குடும்பங்கள் அதிகாரப் பதவிகளுக்காக பௌத்த மத்தத்திற்கு மாறியிருந்தனர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட முடியும்” என்று முதல்வர் குறிப்பிட்டார். 
பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் கண்டன அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் கூறியதாவது;
“அமைச்சர் ராஜித சேனா­ரத்ன அண்­மையில் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு ஒன்றில் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீ­ம் குறித்து தெரி­வித்த கருத்து பெரும் சர்ச்­சை­யை கிளப்­பி­யி­ருக்­கின்­றது. அதனால் அமைச்சர் ராஜி­த மீது முஸ்லிம்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்துள்ளது. அதாவது ஜனா­தி­பதிப் பதவி கிடைக்குமென்­றி­ருந்தால் முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ஹக்கீம் தனது மதத்­தையும் மாற்­றிக்­ கொள்வார் என்று ராஜித தெரி­வித்த கருத்து வன்­மை­யாகக் கண்­டிக்­கத்­தக்க விட­ய­மாகும்.
20 ஆவது திருத்தத்தை கொண்­டு­வர வேண்­டு­மென்­ப­தற்­காக முன்­மொ­ழி­யப்­பட்ட பிரே­ர­ணைகள் தொடர்­பாக முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அவ­ரு­டைய தலை­மையில் சிறு­பான்மைக் கட்­சி­களும் மிக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­டன. இரு பிர­தான கட்­சி­களும் அவர்­க­ளு­டைய அர­சியல் அபி­லா­ஷை­களை அடைந்­து ­கொள்­வ­தற்­கான ஒரு முன்மொழி­வா­கவே 20 ஆவது திருத்­த­மி­ருக்­கின்­ற­து என சிறு­பான்மைக் கட்­சிகள் சுட்­டிக்­காட்­டின.
1972 ஆம் ஆண்டு சிறீ­மாவோ ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்க முத­லா­வது குடி­ய­ரசு சாச­னத்தை கொண்­டு ­வந்­த­போது அப்­போ­தி­ருந்த தமிழர் விடு­தலைக் கூட்­டணி உறுப்­பி­னர்கள் அதனை எதிர்த்­தனர். அத்­துடன் அந்த நகலை தீயிட்டும் கொளுத்­தினர்.சிறு­பான்மைச் சமூ­கத்­திற்கு இருக்கும் ஒரே­யொரு காப்­பு­ட­மை­யான செனட் சபையை ஒழிக்கும் 29ஆவது சரத்தின் “ஏ” பிரிவு ஏன் நீக்­கப்­பட்­டதுடன் அது போன்று சிறு­பான்மை சமூ­கத்தின் உரி­மையை இல்­லாமல் செய்யும் சரத்­து­க­ளி­ருக்­கின்­றன என்­ப­தற்­காக தமிழ்த் ­த­லை­வர்கள் அன்று போரா­டி­னார்கள். அதற்காக அண்ணன் அமிர்­த­லிங்கம் அன்று சிறை­யி­ல­டைக்­கப்­பட்டார்.
பின்னர் 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன கொண்டு வந்த அர­சியல் யாப்பு கூட சிறு­பான்மை சமூ­கங்­களைப் பல விட­யங்­களில் பாதிக்­கின்­றது என்ற குரல்­களும் எதிர்ப்புகளும் எழுந்தன. அது போன்றுதான் தற்போது 20 ஆவது திருத்­தம் கொண்டு வரப்பட்டுள்ளது.சிறு­பான்மை சமூ­கங்­களுக்கு மிகவும் பாதிப்பான இத்திருத்த சட்ட மூலத்தில் சிறுபான்மையினரின் அர­சியல் உரி­மை­களை உத்­த­ர­வா­தப்­ப­டுத்த வேண்டும் என்பதற்காக அமைச்சர் ஹக்கீம் சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தையும் அணி திரட்டிப் போராடினார்.
சிறுபான்மையினருக்கு எது நடந்தாலும் பரவாயில்லை தேர்தல் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த அமைச்சர் ராஜித சேனா­ரத்ன போன்­ற­வர்­க­ளுக்கு அமைச்சர் ஹக்கீமின் செயற்பாடுகள் பெரும் தலையிடியைக் கொடுத்தது. இதனால் தான் மிக மோச­மான கருத்தை அமைச்சர் ராஜித முன்­வைத்­துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு 15 வரு­டங்­க­ளாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமை தாங்கிக் கொண்­டி­ருக்­கின்றார். பல தட­வைகள் சமூ­கத்­திற்­காக அமைச்சர் பத­வி­களைத் தூக்கி எறிந்து விட்டு வந்­துள்ளார். அமைச்சர் பத­விக்­காக ராஜித போன்று அங்­கு­மிங்கும் அலைந்து ஆல வட்டம் போடும் ஒரு தலை­வ­ரல்ல முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வ­ரெ­ன்­பதை இத்­த­கை­ய­வர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்­லிம்கள் தமது உயிரை விடவும் தமது சம­யத்தை மேலாக மதிப்­ப­வர்கள். அதற்­காக போராடி மடி­யக்­ கூ­டி­ய­வர்கள். முஸ்லிம் சமு­தா­யத்தின் அடிப்­படைக் கோட்­பா­டு­களைக் காட்டிக் கொடுக்கும் கருத்­துக்­களைத் தெரி­வித்த சல்மான் ருஷ்­தி­யையும் தஸ்­லீமா ந­ஸ் ரீ­னையும் சமு­தாயத்­தி­லி­ருந்து தூக்­கி­யெ­றிந்­தது எமது முஸ்லிம் சமு­தாயம் என்பதிப் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தில் ஒரு சாதா­ரண குடி­ம­க­னாக இருந்­தாலும் சரி பதவி பட்டம் பணத்­திற்­காகச் சம­யத்தைத் துறக்­க ­மாட்டான். இலங்கை வர­லாற்றில் அப்­படி எதுவும் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை. ஆட்சி அதி­கா­ரத்தைப் பிடிக்க வேண்­டு­மென்­ப­தற்­காக எவர் மதம் மாறி­னார்­க­ளென்­பதை வர­லாற்றைப் புரட்டிப் பார்த்துப் புரிந்து கொள்­ள ­வேண்டும்.
எனவே முஸ்லிம் சமூகத்தை அவமதித்துள்ள அமைச்சர் ராஜித சேனா­ரத்ன முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர முன்வர வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் உரையாற்றுகையில்;
“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பற்றியே அமைச்சர் ராஜித சேனாரத்ன விமர்சித்திருந்தார். அவரது கருத்து ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமூகத்தையும் இஸ்லாம் மார்க்கத்தையும் அவமதித்து விட்டது என்று எவரும் சிண்டுமுடிக்கத் தேவையில்லை. ஒரு அமைச்சர் இன்னொரு அமைச்சரையே குற்றம் சுமத்தியுள்ளார். அது நமது சமூகம் மற்றும் மார்க்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி விட்டது என்று மு.கா. உறுப்பினர்கள் கூறுவது வேடிக்கையானது.
பேருவளை, அளுத்கம பிரச்சினைகளின்போது பொது பல சேனாவை பகிரங்கமாக கண்டித்து, முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த ஒரு சிங்கள அரசியல் தலைமையே அமைச்சர் ராஜித என்பதை எவரும் மறந்து விடக்கூடாது. தனிப்பட்ட அரசியல் ரீதியான மோதல்களை சமூகப் பிரச்சினைகளாக ஊதிப் பெருப்பிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ.எம்.றக்கீப், ஏ.ஏ.பஷீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ் ஆகியோரும் இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் ராஜிதவைக் கண்டித்து உரையாற்றினர்.