மைத்­தி­ரி­பால; மஹிந்த­வுடன் இணைந்தால் அது திரு­டர்­க­ளுடன் நிர்­வா­ண­மாக நிற்­ப­தற்கு சம­மா­ன­தாகும்’- விஜித ஹேரத்

vijitha-herath_1ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மஹிந்த ராஜ­பக் ஷ­வுடன் இணைந்தால் அது திரு­டர்­க­ளுடன் நிர்­வா­ண­மாக நிற்­ப­தற்கு சம­மா­ன­தாகும் என வர்­ணிக்கும் ஜே.வி.பி.யின் ஊட­கப்­பேச்­சா­ளரும் முன் னாள் எம்­.பி.­யு­மான விஜித ஹேரத், எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யையும் ஐ.தே.க.வையும் மக்கள் நிரா­க­ரிக்க வேண்­டு­மென்றும் அவர் தெரி­வித்தார்.
பன்­னிப்­பிட்­டி­யி­லுள்ள ஜே.வி.பி.யின் அலு­வ­ல­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே விஜித்த ஹேரத் இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

ஊழல் மோச­டிகள்இ வீண் விர­யங்கள் நிறைந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ஸ­வையும் அவ­ரது கட்சி சார்­பா­ன­வர்­க­ளையும் ஜன­வரி 8ஆம் திகதி மக்கள் நிரா­க­ரிக்­கத்­தார்கள்.
புதிய நல்­லாட்­சிக்­கான எதிர்­பார்­புடன் ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிரி­சே­ன­வையை தெரி­வு­செய்­தனர்.

ஐ.தே.க.இ மைத்­திரி ஆட்சி 100 நாட்கள் காலக்­கெ­டு­வுடன் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­போதும் மக்­களும் நாடும் எதிர்­பார்த்த விட­யங்கள் எதுவும் நடை­பெ­ற­வில்லை. 175 நாட்கள் ஆட்சி தொடர்ந்தும் சாத­க­மான விடை­யங்கள் சிறி­ய­ள­வி­லேயே இடம் பெற்­றன. மஹிந்த ஆட்­சியைப் போன்றே இந்த ஆட்­சியும் செயற்­பட்­டது. ஊழல் மோச­டிகள் தொடர்­பாக தக­வல்கள் வழங்­கப்­பட்­டது. ஆனால் அது தொடர்பில் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை.

மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜூன மகேந்­தி­ரனின் பிணை முறிவு தொடர்­பான மோச­டிகள் தொடர்­பாக கோப் அறிக்கை வெளி­யி­டப்­ப­டாமல் தடுக்­கப்­பட்­டது. இவ்­வாறு மஹிந்த ஆட்­சியை போன்றே கடந்த ஆட்சி செயற்­பட்­டது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தலை­மைப்­ப­த­வியை பெற்­றுக்­கொண்டு தனது கட்­சியை பாது­காப்­ப­தி­லேயே அதிக அக்­கறை காட்­டு­கின்றார்.
மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்ட மஹிந்­த­வை­யையும் அவ­ரது அணி­யையும் இணைத்துக் கொண்டு மீண்டும் மஹிந்­த­வுக்கு ஆட்­சியை கைய­ளிக்க முயற்­சிக்­கின்றார். அதற்­காக இர­க­சி­ய­மான பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­ப­டு­கின்­றன.

மக்கள் இதற்­காக மைத்­தி­ரிக்கு ஆணை வழங்­க­வில்லை. இன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மக்கள் ஆணையை உதா­சீனம் செய்து விட்டு தனது கட்­சியை பாது­காக்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்றார்.

எனவே ஜனா­தி­பதி மைத்­திரிஇ மஹிந்த அணியின் திருட்­டுக்­கும்­ப­லுடன் நிர்­வா­ண­மாக நிற்கும் நிலை­மை­யையே காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. சுதந்­தி­ரக்­கட்­சியும் ஐ.தே.க.வும் பழ­மை­யான பிழை­யான கைங்­க­ரி­யங்­க­ளையே முன்­னெ­டுக்­கின்­றன. எனவே மக்கள் இரண்டு கட்சிகளையும் நிராகரித்து ஜே.வி.பிக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
ஜே.வி.பிக்கு இத்தேர்தலில் பெரும்பான்மையை வழங்கி பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரித்து பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் என்றும் விஜித்தஹேரத் தெரிவித்தார்.