தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி அம்பாறை மாவட்டத்தில் பொதுத்தேர்தலை முகம் கொடுக்க தயாராகி வருகிறது!

unnamed
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி அம்பாறை மாவட்டத்தில் பொதுத்தேர்தலை முகம் கொடுக்க தயாராகி வருகிறது.அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் ,தமிழ்,சிங்கள மக்களை உள்ளடக்கியதாக வேட்புமனு தயாரிக்கப்பட்டு முடிந்து விட்டதாகவும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமது பலத்தை வெள்ளோட்டம் பார்க்க களமிறங்க தயாராகி வரும் கட்சியான தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இளம் தலைமுறையின் தேவைகளையும்,மக்கள் விரும்பும் அரசியலையும் இந்த நாட்டில் நிலைநிறுத்தி பொருளாதார ரீதியாகவும் சிறந்த மாற்றத்தை கொண்டுவந்து துவச  அரசியலுக்கு முற்றுபுள்ளி வைக்க தமது கட்சி அர்ப்பணத்துடன் செயற்பட போவதாகவும்.எதிர்வரும் தேர்தல்களை முகம் கொடுக்க தயாராகி வருவதாகவும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் செயலாளர் எமது ஊடகத்திற்கு தெரிவித்தார்