தென்கிழக்குப் பல்கலைக்கழக புதிய உபவேந்தருக்கு வாழ்த்தும், வரவேற்பும்!

1_Fotor14எம்.வை.அமீர்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நான்காவது உபவேந்தராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்கள் பதவியேற்றுக் கொண்டதையிட்டு மிகுந்த மகிழ்வடைதாகவும், கடந்த காலங்களில் உபவேந்தர்கள் செயற்பட்டது போன்று செயற்பட்டு பல்கலைக்கழகத்தை உயர் நிலைக்குக் கொண்டுவர புதிய உபவேந்தருக்கு இறைவன் உதவ வேண்டும் என பிராத்திப்பதாகவும், 

பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் உட்கட்டுமான விடயத்தில் மிகுந்த கருசனையுடன் செயற்பட, இப்பல்கலைக்கழகத்துக்கு முதலாவது பேராசிரியரின் வருகை இப்பிராந்திய கல்வியாளர்களால் மேச்சப்படுவதாகவும் தெரிவித்த, அம்பாறை மாவட்ட அஹதியா பாடசாலையின் உறுப்பினரும் அக்கரைப்பற்று வலய அஹதியா பாடசாலைகளின் பொதுச்செயலாளரும் பல்கலைக்கழக ஆய்வுகூட சங்கத்தின் கிழக்குமாகாண இணைப்பாளருமான எஸ்.றிபாய்தீன், புதிய உபவேந்தரை வரவேற்பதாகவும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.